திங்கள், 29 ஜூலை, 2013

பாலாவின் கைராசியால் வாய்ப்பிழந்த நடிகை பூஜா

மிகவும் வெற்றிகரமான நடிகையாக இருந்த பூஜா
பாலாவின் நான் கடவுள்
படத்தில் குருடியாக நடித்தபிறகு அவருக்கு வாய்ப்புகள் அவ்வளவாக அமையவில்லை. இதையடுத்து சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். பின்பு ஒரு சிங்கள படத்தில் நடிப்பதற்காக ( தாய்மொழி) இலங்கை சென்று ஒரு படத்தில் நடித்துவிட்டு இந்தியா திரும்பினார். திரும்பியவர், தனியாக வராமல் காதலுடன் வந்து சேர்ந்திருக்கிறார். அங்குள்ள சிங்கள நடிகருக்கும் இவருக்கும் காதல் தொற்றிக் கொண்டதாம். பெங்களூரில் சில மாத காலம் தங்கியிருந்த நடிகை, காதலரை பிரிய மனமில்லாததால், இனி இந்தியாவே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டு பெட்டி, படுக்கையுடன் ஊருக்கே  புறப்பட்டு விட்டாராம் .இந்த வதந்தியில் எவ்வளவு தூரம் உண்மையோ நாம் அறியோம் பராபரமே 

கருத்துகள் இல்லை: