சனி, 6 நவம்பர், 2010

தலைவர்,செயலாளரின் சுயநலப்போக்கினால் சாரதி தற்கொலை முயற்

மன்னார் தனியார் பஸ் சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரின் சுயநலப்போக்கினால் மன்னார் தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொள்ள முயன்று தற்போது ஆபத்தான நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் தனியார் பஸ் சங்கத்தின் தலைவராக ரமேஸ் என்பவரும், செயலாளராக அன்ரன் என்பவரும் செயல்பட்டு வருகின்றனர். தலைவர் ரமேஸ் என்பவர் கடந்தகாலங்களில் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த நிலையில் தற்போது இரானுவ அதிகாரிகளை தன்வசம் வைத்து பலவிதமான அட்டுளியங்களைச் செய்து வருகின்றார். இந்திரன் என அழைக்கப்படும் நடராஐh ராNஐந்திரன் ( வயது-45) என்பவர் தனியார் போக்குவரத்துச்சங்கத்தில் அங்கம் வகித்து தனது சொந்தமான பஸ் ஒன்றை வன்னிப்பகுதியில் சேவையில் ஈடபடுத்தி வந்துள்ளார். ஒரு நாள் பஸ்சில் பயணிகள் இல்லாமையினால் இன்னும் ஒரு பஸ்ஸினை முந்திக்கொண்டு மன்னார் வந்துள்ளார். இவர் வேறு மாவட்டத்தினைச் சேர்ந்தவர் என்பதினால் இதனைச்சாட்டாக வைத்துக்கொண்டு இவரது வாகன பயன அனுமதியினை ரத்துச்செய்துள்ளனர். இவர்களுக்கு உடந்தையாக மன்னார் கச்சேரியில் கணக்காளராக கடமையாற்றுபவரும் செயற்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தனது பஸ்ஸிற்காண போக்குவரத்த அனுமதி நிறுத்தப்பட்டமையினால் தனது பஸ்ஸினை பிரிதொரு நபருக்கு இந்திரன் 6 இலட்சம் ருபாவிற்கு விற்று விட்டார். கடைசியில் தனது குடும்பத்திற்கு ஒரு வேளையாவது உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக பிரிதொரு நபரின் தனியார் பஸ் ஒன்றிற்கு சாரதியாக கடமையாற்றி வந்துள்ளார். சில தினங்கள் சென்ற நிலையில் மீண்டும் சங்கத்தலைவரும் செயலாளரும் சேர்ந்து இந்திரனை கண்டபடி திட்டி அந்த பஸ்ஸின் அனுமதி பத்திர உரிமமும் பரிக்கப்பட்டு பின் மன்னார் தனியார் போக்குவரத்ப் பகுதிக்குள் வரகூடாது என்றும் மீறி வந்தால் என்ன நடக்கும் என்று தெரியாது என சங்கத்தலைவர் ரமேஸ் இந்திரனை எச்சரித்துள்ளார்.

இதேவேளை இந்திரனால் 6 இலட்சம் ருபாவிற்கு விற்கப்பட்ட அவருடைய பஸ்ஸினை மீண்டும் 8 இலட்சம் ருபாவிற்கு மீளப்பெருமாறு சங்கத்தலைவர், செயலாளர் மற்றும் மன்னார் கச்சேரியில் தனியார் வாகனங்களுக்குப் பொறுப்பாக கடமையாற்றும் கச்சேரிக்கணக்காளரும் இணைந்து வற்புருத்தி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் கடந்த (29-10-2010) அன்று சகல பிரச்சினைகளையும் முன்வைத்து கடிதம் ஒன்றை தயாரித்து சகல தரப்பினருக்கும் வழங்கியுள்ளார். எனினும் நீதி கிடைக்கவில்லை. இறுதியாக (02-11-10) செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிடச்சென்றள்ளார். எனினும் மன்னார் பொலிஸார் வழக்கை பதிவு செய்யவே , விசாரணை செய்யவே இல்லை. இறுதியில் மனமுடைந்து போன இந்திரன் 02ம் திகதி மாலை 4 மணியளவில் பஸ்ஸினுள் நஞ்சருந்திய நிலையில் அயலவர்களினால் கண்டுபிடிக்கப்பட்டு பின் மன்னார் பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது இவ்வாறு இருக்க தலைவர், செயலாளர்களின் 5 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றமை தெரிய வருகின்றது. சங்கத்தில் பல குளறுபடிகள் இடம்பெற்று வருகின்றமையினால் தலைவர் செயலாளர் மாற்றப்படவுள்ளதாக சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

(மன்னார் நிருபர்)

கருத்துகள் இல்லை: