வெள்ளி, 5 நவம்பர், 2010

அரசு பள்ளியில் கிறிஸ்தவ மத பிரசாரம் முன்சிறையில் பா.ஜ., மறியல்

புதுக்கடை: முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்தவ மத போதனைகள் அடங்கிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
முன்சிறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ராஜம்மேரி. இவர் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியரிடம் கிறிஸ்தவ போதனைகள் அடங்கிய "ஆயிரம் ஸ்தோத்திர பலிகள்', "குழந்தைகளை நல்வழிப்படுத்தும் திருமறை' ஆகிய இரண்டு புத்தகங்களை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களிடம் கிறிஸ்தவ போதனை புத்தகங்களை வழங்கி, மாணவர்களை மதம் மாற்ற தூண்டும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கேட்டு பா.ஜ., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. முன்சிறை அரசு பள்ளி முன் நடந்த போராட்டத்திற்கு இந்து முன்னணி ஒன்றிய தலைவர் கமலதாஸ் தலைமை வகித்தார்.

பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், செயலாளர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன், ஒன்றிய பொதுச்செயலாளர் வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாலத்தடி விஜயகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் குமார், பொதுச்செயலாளர் ஐயப்பதாஸ், மாவட்ட இந்து முன்னணி தலைவர் குழிச்சல் செல்லன், விளாத்துறை நகர தலைவர் மோகன், பைங்குளம் நகர தலைவர் சந்தோஷ்குமார், நகர இளைஞரணி தலைவர் பிஜூ, ஏழுதேசம் நகர தலைவர் ராஜகுமார், கொல்லங்கோடு பஞ்., துணைத்தலைவர் பத்மகுமார், முன்சிறை பஞ்., யூனியன் கவுன்சிலர் செல்வராஜ், ராம்குமார், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இரண்டு பஸ்களை சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன் வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்த வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
சம்பவ இடம் வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, குழித்துறை கல்வி மாவட்ட அதிகாரி அருள்முருகன், குளச்சல் டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன், புதுக்கடை இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் அகியோரிடம் மாவட்ட பா.ஜ., துணைத்தலைவர் சந்திரகுமார், முன்சிறை ஒன்றிய தலைவர் சவுந்தர்ராஜன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில், ஒரு வாரத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை இடமாற்றம் செய்யப்படுவார் எனவும், ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதற்கு சந்திரகுமார் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் முன்சிறையில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.அரசு கல்வி நிறுவனங்களில் மத பிரசாரத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுக்கடை நகர காங்., தலைவர் துரை தெரிவித்தார்.

மலர் - சென்னை,இந்தியா
2010-11-05 06:40:41 IST
துபாய் ராஜ், கிறிஸ்டியன் தான் சதாம் க்கு தூக்கு போட்டது. நீ துபாயில் துண்டு பிரசுரம் கொடுத்து பார், உன் கை துண்டு அயிடும்....
PG - USA,இந்தியா
2010-11-05 06:31:02 IST
This is an age old problem. Even in prison this people do it. These are all fundamentalists....
2010-11-05 04:11:00 IST
கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ மதம் மட்டுமே உயர்ந்தது என்ற கண்முடித்தனமான நம்பிகையில் இது போன்ற தவறுகளை செய்கிறார்கள். அரசு பள்ளியில் கிறிஸ்தவ மதம் போதிக்க நினைப்பது தவறு. பாரதிய ஜனதா கட்சி குமரி மாவட்டதில் வினயகர் சதுர்த்தியில் கலவம் செய்த கயவர்களை கண்டித்து போராட்டம் நடத்துமா? மதவெறி இல்லாத மனிதன் யார்? பிஜேபி ஏ நீ என்று மக்களை மக்களாக வாழா விடுவாய்? திருந்துங்கடா இல்லை என்றால் திருத்தபடுவீர்கள்......
alex - usa,இந்தியா
2010-11-05 03:03:18 IST
குமரி பாலா, நீ குமரிக்கு பலன் இல்லே. பிறகு என்னடா கன்யா குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதத்தின் பலன் கிடைகாத ஒருத்தன் உண்டா. பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயிப்பதும் தோற்பதும் கூட ..பாரதிய ஜனதா கட்சி வீணாக மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது....கிறிஸ்தவ மதம் ஒருபோதும் தீ‌யவையை போதித்தது கிடையாது. நல் ஒழுக்க புத்தகம் வாசித்தால் மாணவர்கள் கெட்டு போவதிலை.......
தமிழ் - chennai,இந்தியா
2010-11-05 02:29:40 IST
குண்டு போடுவதற்கும், கர்ப்பிணிகளை குஜராத்தில் கொல்வதற்கும் என்ன பதில்?...
jalsa - nagercoil,இந்தியா
2010-11-05 02:14:18 IST
நானும் முன்சிறை தான். இந்த பிஜேபி காரனுக்கு வேற வேலை இல்லை. நானும் அங்கே வந்திருந்தேன். நான் ஒரு முஸ்லிம்மையும் பார்க்கவில்லை, ஒரு தி மு க காரர்களையும் பார்க்கவில்லை. மொத்தமே பத்து பேர் கூட வரல. ஏன்டா இப்படி பொய் சொல்லுறீங்க. இப்படி பொய் சொல்லி தான் இந்தியாவையே இல்லாம பண்ணிடீங்க. ஏன்டா mohandasu, யாருப்பா அப்படி 50000 குடுக்குறாங்க. ஏன்டா இப்படி சவடால் விட்டு விட்டு தானேடா உங்க கட்சி இல்லாம போச்சு....
ponnuswamy - DXB,இந்தியா
2010-11-05 01:55:15 IST
திருவாளர் ராஜ் அவர்களே, பைபிளில் உள்ள சாலோமனின் உன்னத பாட்டுக்கள் என்ற அதிகாரத்தை படித்தால் இவர்களுக்கு நல்ல புத்தி வரும் என் நினைக்கிறேன். பகவத் கீதாவில் சொல்லாத ஒழுக்க நெறிகளா ? ஹிந்து மதத்தில் சொல்லாத ஒழுக்க்க நெறிகள் வேறு எந்த மதத்திலும் இல்லை என்றே சொல்லலாம். ஐரோப்பா நாடுகளில் எல்லாம் கிறிஸ்தவ் மதத்தை தான் பின்பற்றுகிறார்கள். அங்கே உள்ள வாழ்வியல் முறை எப்படி இருக்கு? இதுவா கிறிஸ்தவம் சொல்லி கொடுத்தது. சொல்லுங்க. அந்த முறைகளை எல்லாம் இந்தியாவிலும் பரவி விடும் ராஜ் அவர்களே. கிணறு வாழக்கையினை விட்டு பரந்த வாழ்வு வாழ வாருங்கள். i...
பெரியார் - சென்னை,இந்தியா
2010-11-05 01:23:39 IST
சொன்னா கேக்கவே மாட்டேங்கிறாங்க. மதம் என்பது வாழ்க்கை என்ற சாப்பாட்டுக்கு ஊறுகா மாதிரி. ஊருகாயையே சாப்பாடா சாப்பிட்டீங்கன்னா ஒழிஞ்சு போய்டுவீங்க....
mohanadhas - male,மாலத்தீவு
2010-11-04 12:58:11 IST
mr . raj do you know how the christianity is spread to the poor and uneducated people through out the world . read the histry of the christinity.[ by killing , money power muscle power, women etc] in kk distric if convert one hindu to christian i will get 50000 rupees or a job. in the name jesus they are the people doing all the nonsense things....
krishnapriyan - nagercoil,இந்தியா
2010-11-04 11:23:59 IST
ஹிந்துகளின் உரிமைக்காக பாடுபடும் பிஜேபி கு எனது மனமார வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்...
குமரி பாலன் - முன்சிறை,இந்தியா
2010-11-04 11:15:26 IST
டேயி ராஜ் நான் முன்சிறை யை சார்ந்தவன் , எங்கள் இடத்தில நடப்பது உனக்கு துபாய் இல் இருந்தா பார்க்க முடியாது, நடந்த போராட்டத்தில் தி மு க நிர்வாகிகளும் இருந்தனர் , முசுலீம் சகோதரர்களும் வந்துதிருந்தனர், ஆதரங்களுடன் தான் போராட்டம் நடை பட்டது ....
Deivanayagam - Doha,கத்தார்
2010-11-04 09:30:24 IST
ராஜ், பாட புஸ்தகத்தில் இல்லாத ஒழுக்கம் துண்டு பிரச்சாரத்திலா? ஆசிரியர், பள்ளியில் ஆசிரியர் வேலை பார்க்க வேண்டும், மத போதிக்கவா வேலை?????...
Raj - Dubai,இந்தியா
2010-11-04 01:47:11 IST
பாரதிய ஜனதா கட்சி வீணாக மத கலவரத்தை தூண்ட முயற்சிக்கின்றது....கிறிஸ்தவ மதம் ஒருபோதும் தீ‌யவையை போதித்தது கிடையாது. நல் ஒழுக புத்தகம் வாசித்தால் மாணவர்கள் கெட்டு போவதிலை....அரசியல் லாபத்துக்காக வீண் நாடகம் ஆடுகின்றனர்

கருத்துகள் இல்லை: