வியாழன், 4 நவம்பர், 2010

உலகின் முக்கிய நபர்கள் பட்டியலில் சோனியாகாந்தி-மன்மோகன் சிங்

உலகின் முக்கிய நபர்களாக சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் தெரிவாகியுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் முக்கியமானவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 68 பேர் அடங்கிய பட்டியலை அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இப்பட்டியலில் முதலிடத்தை சீன பிரதமர் ஹு ஜிண்டாவும், 2ஆவது இடத்தை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் பெற்றனர். இதில் இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், ரட்டன் டாடா, முகேஷ் அம்பானி, லட்சுமி மிட்டல் போன்றவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை: