சனி, 6 நவம்பர், 2010

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும்-ஒபாமா

மும்பை: தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறினார்.

மும்பை வந்துள்ள பராக் ஒபாமாவும், அவரது மனைவி மிஷேலும் தாஜ் ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த மும்பை தாக்குதல் நினைவு புத்தகத்தில் கையெழுத்திட்டனர்.

பின்னர் மும்பை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலு்த்தும் நிகழ்ச்சியில் பேசிய ஒபாமா, நான் மும்பைக்கு வந்ததற்கும், தாஜ் ஹோட்டலில் தங்குவதற்கும் காரணம் இருக்கிறது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்த ஹோட்டலும் ஒன்று. அந்தத் தாக்குதலை நாம் என்றும் மறக்க முடியாது.

ஆனால், அந்தத் தாக்குதலை இந்திய மக்கள் மிகுந்த மன பலத்துடன் எதிர்கொண்டனர். அந்தக் கொலையாளிகளிடம் மக்கள் பணிந்துவிடவில்லை.

அந்தத் தாக்குதலுக்கு அடுத்த நாளிலேயே மும்பை நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. தாக்குதலால் முடங்கிவிடாமல் ஸ்கூட்டர்களிலும் ரயில்களிலும் பணிக்குச் செல்வோர் தங்கள் பணிகளை உடனே தொடங்கினர். தாஜ் ஹோட்டலும் அடுத்த ஒரே மாதத்தில் மீண்டும் விருந்தினர்களை அனுமதிக்க ஆரம்பித்தது.

ஹோட்டல் முடங்கிவிடாமல் மீண்டும் எழுச்சி கொண்டு நின்றது. அதே போல மும்பையும் இந்த மாபெரும் தேசமும் தனது இயல்பு வாழ்க்கைக்கு உடனே திரும்பின. அது இந்திய மக்களின் பலத்தை வெளிக்காட்டியது.

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியாவுடன் அமெரிக்கா இணைந்து செயல்படும். மும்பை போன்ற மற்‌‌றொரு தாக்குதல் நடந்துவிடாமல் தடுக்க இரு நாடுகளும் தேவையான உளவு ரகசியங்களை பகிர்ந்து வருகிறோம் என்றார்.

மகா. முதல்வரிடம் வருத்தம் தெரிவித்த யுஎஸ் தூதரகம்:

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு கெடுபிடிகள் மிக அதிகமாக உள்ளன.

ஒபாமாவை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக் சவாணுக்கும் துணை முதல்வர் சகன் புஜ்பால், உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அவர்களுக்கு பாஸ் வழங்க, அவர்களது அட்ரஸ் புரூப், அடையாள அட்டை நகல், போட்டோ, பேன்கார்டு எண், பாஸ்போர்ட் எண் எல்லாம் கோரப்பட்டது. மேலும் இவர்களுக்கு முறைப்படியான அழைப்பும் நேற்று மாலை வரை வரவில்லை.

இதையடுத்து ஒபாமா பங்கேற்கும் நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் எச்சரித்தனர்.

இதையடுத்து நேற்றிரவு அமெரிக்கத் தூதரம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டது. மேலும் நேற்றிரவில் அமெரிக்கத் தூதரகம் அழைப்பிதழ்களையும் தந்தது.

இதைத் தொடர்ந்து இன்று ஒபாமாவை, மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் மகாராஷ்டிராவின் வரலாறு, பண்பாடு அடங்கிய புததகத்தை நினைவுப் பரிசாக வழங்கி வரவேற்றார். ஆனால் உள்துறை அமைச்சர் பாட்டில் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு ஊருக்குச் சென்றுவிட்டார்.
பதிவு செய்தவர்: கேப்டன் டிவி செய்திகள்
பதிவு செய்தது: 06 Nov 2010 5:42 pm
சென்னையில் ஒபாமா- சென்னை வந்த ஒபாமா தீவிரவாத்தை ஒடுக்கும் வித்தையை கற்க கேப்டனிடம் அனுமதி கேட்க , கேப்டனோ அதற்க்கு ஒபாமாக்கு திறமை பத்தாது என்றும் தான் கூட்டணியே சேராமல் இதுவரை தீவிரவாதிகளை ஒடுக்கியது போல ஒபாமாவும் இந்தியாவுடன் கூட்டணி சேராமல் தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியில் ஈடுபடுமாறு கேட்டுகொண்டார்.பின்பு மனம் இரங்கி தனது ஆஸ்தான வித்தையான லெப்ட் காலை சுவரில் ஊன்றி ரைட் காலை எம்பி சுழற்றி தீவிரவாதிகளை உதைக்கும் வித்தையை கற்று தர , அதனை கற்றுக்கொண்ட ஒபாமா மகிழ்ச்சியுடன் அமெரிக்கா திரும்பினார்.

பதிவு செய்தவர்: captain
பதிவு செய்தது: 06 Nov 2010 5:29 pm
பிளஸ் போஸ்ட் கேப்டன் news

கருத்துகள் இல்லை: