சனி, 6 நவம்பர், 2010

வெள்ளவத்தை கடலில் நீராடிய பல்கலைக்கழக மாணவர் இருவர் பலி – ஒருவர் கோப்பாயைச் சேர்ந்தவர்

வெள்ளவத்தைக் கடலில் நீராடிய ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி மரணமாகினர்       இதில் ஒருவர்    கோப் பாயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது   தீபாவளி   தினமான   நேற்று   ஸ்ரீ ஜெயவர்த்தனபுர   பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் வெள்ளவத்தைக் கடலில் நீராடியுள்ளனர்.
அப்போது அலையில் சிக்குண்டு ஆறு பேரும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் 4 பேரை கடற்படையினர் ஆபத்தான நிலையில் மீட்டனர். மற்றைய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்படவில்லை எனக் கூறப்பட்டது. இவர்களில் மூன்றாம் வருடமாண வனான கோப்பாயைச் சேர்ந்த நரசுதன், இரண்டாம் வருட மாண வனான வவுனியா தாண்டிக்குளத் தைச் சேர்ந்த அன்பு தயாளன் ஆகிய இருவருமே உயிரிழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  இவர்களின் உறவினர்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக தமிழ் மாணவர் மன்றம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: