புதன், 3 நவம்பர், 2010

ஒபாமா காரில் போகும்போது கடைகள் மூட உத்தரவு


அமெரிக்க அதிபர் ஒபாமா வருகிற 6, 7, 8, 9 ஆகிய 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக 6-ந்தேதி டெல்லி வருகிறார்.

7-ந்தேதி மும்பை செல்கிறார். 8-ந்தேதி டெல்லியில் பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். 9-ந்தேதி காலை சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஒபாமா இந்தோனேசியா செல்கிறார்.
மும்பையில் சிறுவர்களுடன் ஒபாமா தீபாவளி கொண்டாடுகிறார். காந்தி தங்கியிருந்த மணிபவனுக்கு செல்கிறார்.

ஒபாமா வருகையை யொட்டி டெல்லி, மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏறபாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒபாமா வருகைக்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ்-இ- முகம்மத் மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதையடுத்து டெல்லி, மராட்டியம், காஷ்மீர் ஆகிய 3 மாநிலங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் டெல்லியில் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் டெல்லி போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக ஒபாமா செல்லும் பாதைகளில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

போஸ்டர்கள் ஒட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒபாமா டெல்லியில் மவுரியா ஷெரட்டன் ஒட்ட லில் தங்குகிறார். இந்த ஓட்டல் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஓட்டலைச் சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

ஓட்டலின் அனைத்து பகுதியிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: