ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

YG மகேந்திரன் மகளின் பார்ப்பன ஜாதி வெறி .. நக்கீரன் பேட்டி வீடியோ


Ravishankar Ayyakkannu : YG மதுவந்தியின் பேட்டியில் சொன்னதும் சொல்லாததும்!
சொன்னது: பார்ப்பனர்கள் வைதீகப் பணியாற்றாவிட்டாலும் பார்ப்பனர்கள் தான்.
சொல்லாதது: சூத்திரர்கள் படித்தாலும் உயர் பதவிகளுக்குச் சென்றாலும் பணம் வைத்திருந்தாலும் சூத்திரர்கள் தான்.
சொன்னது: பார்ப்பனர்கள் கோயில்களில் கூட்டிப் பெருக்கும் வேலைகளில் ஈடுபடுட்டுள்ளார்கள்.
சொல்லாதது: கோயில்களில் அந்தப் பணிகளுக்கு மற்ற சாதிகளை அனுமதித்தால் தீட்டு ஆகி விடும்.
சொன்னது: கழிப்பறைப் பணி செய்யும் பார்ப்பனர்கள் உள்ளார்கள்.
சொல்லாதது: அரசில் உள்ள துப்புரவுப் பணிகளைக் கூட ஆட்டையைப் போடும் பார்ப்பனர்கள் அதை தலித்களுக்குக் குறைந்து கூலிக்கு Outsource செய்கிறார்கள்.
சொன்னது: முன்னேறிய சாதிகளிலும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள்.
சொல்லாதது: அனைத்துத் துறைகளிலும் வேலையின்மை என்பது நாடு தழுவிய பிரச்சினை. ஆனால், ஒரே தகுதி உடைய பார்ப்பனருக்குத் தரப்படும் அர்ச்சகர் வேலை வேதம் படித்தாலும் மற்ற சாதிகளுக்கு மறுக்கப்படுவது ஏன்?
சொன்னது: தன்னுடைய சாதிக்குத் துப்புரவுப் பணி செய்யும் உடல் வாகு இல்லை.

சொல்லாதது: உழவு மாடு, கோயில் மாடு என்று உடல் திறனைப் பார்த்து மாடுகளை வேலை வாங்குவதைப் போல மனிதர்களை விலங்குகளுக்கு ஒப்பாகப் பார்ப்பது தான் சாதி. சாதியின் பெயரால் காயடிக்கப்படாவிட்டால் இங்கு எல்லா மாடுகளுமே கோயில் மாடுகள் ஆக முடியும்.
(தொடர்புடைய செய்திகள் மறுமொழியில்)

கருத்துகள் இல்லை: