சனி, 6 ஜூலை, 2019

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு நிராகரிப்பு .... மறைத்த எடப்பாடி அரசு ..

LRJ : ஒட்டுமொத்த மாநிலமும் ஓர் குரலில் மாநில சட்டமன்றத்தில்
நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை மத்திய அரசு நிராகரித்த செய்தியே நீதிமன்ற வழக்கில் தான் வெளிவருகிறதென்றால் தமிழ்நாட்டில் ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா என்பது முதல் கேள்வி. மத்திய அரசு இந்த நிராகரிப்பை எப்போது செய்தது?
எந்த காரணுங்களுக்காக செய்தது?
அந்த நிராகரிப்பு உத்தரவை மத்திய அரசாங்கம் தமிழக அரசில் யாருக்கு அனுப்பியது?
அந்த நிராகரிப்பு குறித்து மத்திய அரசோ மாநில அரசோ ஏன் இன்றுவரை இந்த விவரங்களை இன்றுவரை வெளியிடவில்லை? இரண்டு அரசாங்கங்கள் இவ்வளவு தூரம் அப்பட்டமான மோசமான கூட்டுக்களவாணித்தனத்தில் ஈடுபடலாமா?
என்று ஏகப்பட்ட துணைக்கேள்விகள் எழுகின்றன. இதற்கான பதில்களை சொல்வது யார்?

கருத்துகள் இல்லை: