வெள்ளி, 5 ஜூலை, 2019

துனிசியா நாட்டில் படகு விபத்து; 80க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

துனிசியா நாட்டில் படகு விபத்து; 80க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்
தினத்தந்தி : துனிசியா நாட்டில் ஏற்பட்ட படகு விபத்தில் 80க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. ஜெனீவா, துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி கொண்டு சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் இருந்து ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்து உள்ளனர். அந்த படகில் 80க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். அதிக எடையால் படகு திடீரென நடுவழியில் கவிழ்ந்தது. இதனை கவனித்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: