சனி, 16 பிப்ரவரி, 2019

போர் - வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் பலகோடி ரூபாய் சதி.. இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க.... ?

நந்தா குமார் : சமீபத்திய தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா,
பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என செய்திகள் பரவுவதை கவனித்திருப்பீர்கள். இது சாதாரண விசயமாக தெரியலாம். ஆனால் இதன் பின் வெளிநாடு வாழ் பார்ப்பனர்களின் பல லட்சம் கோடி சதித்திட்டம் உள்ளது.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70 ஆக உள்ளது. போர் ஏற்பட்டால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படும். ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து 120ஐத் தொடும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர். அப்படி ஆனால் இப்போது 75 ரூபாய்க்கு விற்கிற பெட்ரோல் விலை 150 ரூபாய் ஆகும். அனைத்துப் பொருட்களும் விலை உயரும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும். மக்கள் ஒருவேளை உணவிற்கே சிரமப்படுவர்
ஆனால் ஒரு கும்பலுக்கு மட்டும் அதிக நன்மை ஏற்படும். அவர்கள் அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள். அமெரிக்காவின் ட்ரம்ப் மண்ணின் மைந்தன் கொள்கையை பின்பற்றுபவர். இதனால் அங்குள்ள பார்ப்பனர்களுக்கு தற்போது வேலை கிடைப்பது இல்லை. அவர்கள் இந்தியாவிற்கு திரும்பி வர யோசிக்கின்றனர். அவர்கள் இத்தனை காலம் சேர்த்து வைத்த சொத்துக்கள் அமெரிக்க டாலரின் மதிப்பில் உள்ளன. அவர்கள் இந்தியா திரும்பும் போது இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும். உதாரணமாக பத்து மில்லியன் டாலரை தற்போதைய மதிப்பில் இந்தியாவிற்கு கொண்டு வந்தால் 70 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால் போருக்கு பிறகு கொண்டு வந்தால் 120 கோடி ரூபாய் கிடைக்கும். ஒரு போரினால் ஒரு ஆளுக்கு எத்தனை கோடி இலாபம் பாருங்கள். இது போல எழுபது லட்சம் பேருக்கு எத்தனை கோடிகள் கிடைக்கும்? இவர்களுக்கு இங்கு வேலை கிடைக்க வசதியாக பல்கலைக்கழக சட்டம் கூட சமீபத்தில் மாற்றப்பட்டது.

இந்த அமெரிக்கா வாழ் பார்ப்பனர்கள் பெரும் பணம் செலவழித்து இதற்காக சமூக வலைதளங்களில் பல பொய் செய்திகளை உருவாக்கி போர் வர வேண்டும் என பரப்பி வருகிறார்கள். அப்படி போர்வந்தால் சாகப் போவது அவர்கள் அல்ல. இராணுவத்தில் வேலைக்கு சேர்ந்த நம் சகோதரர்களே. அதே போல விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுபவர்களும் நாம் தான். உணவுப் பஞ்சத்தால் சாகப் போவதும் நாம் தான். ஆனால் அவர்களுக்கோ பல கோடி இலாபம் கொட்டும்.
இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். போரில் இருந்து இந்தியாவை காக்க வேண்டும். தேசத்தின் பொருளாதார நலனை காப்பதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பங்கு உண்டு.

கருத்துகள் இல்லை: