சனி, 9 ஜூன், 2018

மளிகை கடையில் சத்துணவு முட்டைகள் விற்பனை .. 4000 கோடி சம்பாதிப்பேன் என்று சவால் விட்ட சரோஜாவின் சத்துணவு ,,,

தினகரன் :கெங்கவல்லி: தமிழக அரசு சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் 2 முறை முட்டை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் “சீல்” வைக்கப்பட்ட முட்டைகள் ஊராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர்கள், தங்களுக்கான முட்டைகளை எடுத்துச் செல்கின்றனர். இந்த முட்டைகளை, கெங்கவவல்லி கடைவீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு தலா ₹2.50க்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை: