வெள்ளி, 8 ஜூன், 2018

நீட் கீர்த்தனாவின் தந்தை Dr. காசி : ஏழை பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது

Maha Rajan : Dedicated to CBSE Bhakths .@
நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவி கீர்த்தனாவின் தந்தை
Dr. காசி அவர்களின் பேட்டி ...
"அரசாங்கம் பயிற்சி வழங்குகிறதே...’ என்று பலர் சொல்கிறார்கள். அரசால் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் அரைகுறையான பயிற்சி மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகள் ஏனோதானோ என்றில்லாமல் சிறப்பான ஆசிரியர்களால் வழங்கப்பட வேண்டும்.
என் மகள்தான் மாநிலத்தில் முதல் இடம். அவளுக்குத் தேவையான வாய்ப்புகளை, வசதிகளை என்னால் செய்துகொடுக்க முடிந்தது. என் மகளும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள். ஆனால், ஏழை பெற்றோர்களால் அவர்களின் பிள்ளைகளுக்கு அதே அளவு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது. இந்தத் தேர்வே ஒரு சமநிலையான தேர்வு கிடையாது என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றிருக்க வேண்டும்.
இங்கேயிருக்கும் கட்டமைப்புகளை, வசதிகளை மேம்படுத்தி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்புகளை உருவாக்கித் தந்து, அதற்குப் பிறகு தேர்வு நடத்தினால்தான் சரியாக இருக்கும்’’
Dedicated to CBSE Bhakths . வாழ்வுக்கான மருத்துவர் அரங்கத்தின் பொதுச்செயலாளர் ஆவார்.

கருத்துகள் இல்லை: