செவ்வாய், 8 மே, 2018

ஹிட்லரும் மாணவர்களும் .. மோடியும் மாணவர்களும் ... வரலாற்றில் மீண்டும் பாசிஸ்டுகள் ..

Thirumeni Saravanan : 1933, ஜனவரி மாத துவக்கத்தில் ஹிட்லரிடம் அவரின் ஆஸ்தான ஆலோசகர் ஒரு விஷயத்தை சொல்லுகிறார்.
“நாஜிக்களின் எதிர்கால பின்னடைவுகளுக்கு யூதர்களின் பரந்துபட்ட கல்வியறிவும் முக்கிய காரணமாக இருக்க போகிறது. அதனால் அவர்களின் கல்வி பெறும் உரிமையை நாம் தடுத்தாக வேண்டும்” என்கிறார்.
ஏற்கனவே நட்பு நாடுகள் பல ஹிட்லரின் வெளிப்படையான சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிர்ப்புகளை தெரிவிக்க ஆரம்பித்த காலகட்டம் அது. அதனால் யூதர்களின் கல்வி உரிமை மீது நேரடியாக தாக்குதல் நடத்துவது அறிவின்மை என்பதை உணர்ந்த ஹிட்லர், முழுக்க முழுக்க நாஜிக்களின் சிந்தனைகளை திணிக்கும் வகையிலான “நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வி” என்ற அறிவிப்பாணையை வெளியிடுகிறான். அதன்படி புதிய பாட திட்டங்கள் உருவாக்கபடுகின்றன. அவை நாஜிக்களின் அனுமதி பெற்ற பின்னரே பள்ளிகளுக்கு அனுப்பப்படவேண்டும் என்றும் உத்தரவிடுகிறான். அதுவரை பரந்துபட்ட கல்விமுறையை கற்றுவந்த யூத குழந்தைகளுக்கும், அவர்கள் பெற்றோர்களுக்கும் அது உளவியல் ரீதியாக மிகப்பெரும் பின்னடைவை கொடுக்கிறது.

அத்தோடு ஹிட்லர் நிற்கவில்லை. யூத குழந்தைகளை குறி வைத்து அவர்களுக்கான Access to Education ஐ கடுமையாக்குகிறான். எளிதில் அவர்களால் அரசு பள்ளிகளில் கல்வி பெற முடியாதபடி மறைமுக சட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டுவருகிறான்.
விளைவு, 16 சதவிகிதமாக இருந்த பள்ளி செல்லும் யூத குழந்தைகளின் சதவிகிதம் வெறும் 1% ஆக குறைந்தது.
Hitler’s Mission accomplished.
என்னாது..?? அது ஜெர்மனி இல்லை, இந்தியாவா?!!
இருக்கலாம்...
அது ஹிட்லர் இல்லை... கேடியா?!
ஹ்ம்ம்ம்...
சம்பவம் நடந்தது 1933 ன் துவக்கத்தில் மட்டும் இல்லை... 2018 ன் துவக்கத்திலேயும் நடக்குதுன்னு தெளிவா தெரியுது. கொடுங்கோலன் ஹிட்லர் இன்னும் சாகவில்லை என்றும் புரிகிறது.
ஆம் .. ஒரு இனத்தை அழிக்க முதலில் அவனின் கல்வியை அழிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை: