வியாழன், 10 மே, 2018

ஆதார், ஜிஎஸ்டி ரத்து செய்யப்படும்: ராகுல் காந்தி அறிவிப்பு,, மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தால்

dinakaran :பெங்களூரு: ‘‘மத்தியில் மீண்டும் காங்கிரஸ் அரசு அமைந்தால்
பொதுமக்களுக்கு தொல்லை  கொடுத்து வரும் ஆதார், ஜி.எஸ்.டி. உள்பட சட்டங்கள்  ரத்து செய்யப்படும்’’ என   ராகுல் காந்தி தெரிவித்தார். ராகுல்காந்தி, நேற்று பெங்களூரு பலதுறை நிபுணர்கள்,  மாணவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: மக்களவைக்கு வரும் 2019ல் நடக்கும் தேர்தலில் மீண்டும்  காங்கிரஸ் அரசு அமைந்தால் பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வரும் ஆதார்,  ஜி.எஸ்.டி.  உட்பட்ட சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
மேலும், தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள் பிள்ளைகளுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில்  இலவச  நோட்டு-புத்தகம், அடையாள அட்டை, லேப்டாப் உள்பட பல வசதிகள் செய்து  கொடுக்கப்படும். மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையி–்ல் நல்லாட்சி அமைய அனைவரும்  ஆதரிக்க வேண்டும்இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: