வியாழன், 10 மே, 2018

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் குண்டாஸ்!

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் குண்டாஸ்!மின்னம்பலம்: குழந்தை கடத்தல் தொடர்பாக சமூக வலைத்தளமான வாட்ஸ் அப்பில் வதந்திகளை பரப்பினால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் எஸ்.பி. பகலவன் எச்சரித்துள்ளார்.
குழந்தை கடத்துவோர் என சந்தேகப்பட்டு கடந்த இரண்டு நாட்களில் இருவர் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் வாட்ஸ் அப்பில் பரவும் தவறான தகவல்தான்.
அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்துக்குரிய நபர்கள் குறித்து காவல்துறையினரிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும். வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரை சமூக விரோதிகளாக கருதி அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வந்த தவறான தகவலால் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வேலூர் எஸ்.பி. பகலவன் கூறினார்.
இதுபோன்று, காஞ்சிபுரம் எஸ்.பி சந்தோஷ் ஹதிமானி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழுப்புரத்தில் சந்தேகப்படும் நபர்கள் குறித்து 9655440092 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் அளிக்கலாம். விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தைகளை கடத்தும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தவறான தகவலை பரப்பக் கூடாது என அம்மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை: