திங்கள், 19 பிப்ரவரி, 2018

காணாமல் போகும் நிலையில் தமிழக மொழிகள்! கோட்டா , தொட்டா

தினமலர் : புதுடில்லி: தமிழகத்தில் உள்ள கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள் உட்பட, 42 மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும்பட்டியலில் உள்ளன. குறைந்த அளவு மக்கள் பயன்படுத்துவதால், 42 இந்திய மொழிகள் மற்றும் வட்டார பேச்சு வழக்கு மொழிகள் விரைவில் காணாமல் போகும் என கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மொழிகளை, யாருமே பேசாத நிலை உருவாகும் என, தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக, மொழியியல் துறை நிபுணர்கள் கூறியதாவது: மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தக் கூடிய, 22 பட்டியலிடப்பட்ட மொழிகள், 100 பட்டியலிடப்படாத மொழிகள் புழக்கத்தில் உள்ளன.அதே நேரத்தில், 10 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே பயன்படுத்துவதால், 42 மொழிகள், வட்டார பேச்சு வழக்குகள் மிக விரைவில் அழிந்துவிடும் அபாயம் உள்ளது. யுனெஸ்கோவும் இதை பட்டியலிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில், கோட்டா மற்றும் தோடா ஆகிய மொழிகள் காணாமல் போய்விடும். இந்தப் பட்டியலில் மிகவும் அதிகமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில், 11 மொழிகளும், மணிப்பூரில், ஏழு மொழிகளும் அழியும் நிலையில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

கருத்துகள் இல்லை: