வெள்ளி, 7 ஜூலை, 2017

லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் (பாஜகவின்) சி பி ஐ திடீர் சோதனை .... குடியரசு தலைவர் தேர்தல்....

பாட்னா : கடந்த 2006ல் ஓட்டலுக்கு டெண்டர் விட்டதில் முறைகேடு நடந்த
புகாரில் லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் லாலுவுக்கு சொந்தமான 12 இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. ரெய்டு: பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மத்திய ரயில்வேதுறை அமைச்சராக கடந்த 2006ம் ஆண்டு பதவி வகித்தபோது ராஞ்சி, மற்றும் புரி நகரங்களில் ஹோட்டல்கள் அமைப்பதற்கான அனுமதியை தவறுதலாக பயன்படுத்தியதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், டில்லி, பாட்னா, ராஞ்சி, புரி மற்றும் குர்கான் பகுதிகளில் லாலுவிற்கு சொந்தமான 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. தினமலர்

கருத்துகள் இல்லை: