செவ்வாய், 4 ஜூலை, 2017

ராஜீவ் கொலையை வைத்து 25 ஆண்டுகள் அரசியல் செய்த அதிமுக ..

ராஜீவ் காந்தியை கொல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப் பயல்களே!!அதெல்லாம் யாரால்? .
எதிரொலி :யாரு தமிழன் ? யாரு "இனத்துரோகி " ?
கலைஞரை அப்படி சொல்ல உனக்கென்னடா யோக்கியதை இருக்கு?
பெரியாரியவாதியாக சொல்லிக்கொண்டு, கலைஞரை "இனத்துரோகி" என்று சொல்லிக்கொண்டு திரியும் சூத்திர முண்டங்களுக்கே இந்த பதிவு.
ஊரான் பிள்ளையை பெற்றவர்கள் ஒப்புதல் இல்லாமல் பலவந்தமாக பிடித்துப்போய் போரில் கொன்று குவித்தாரே பிரபாகரன் அவரை "பிள்ளை பிடி பிரபாகரன்" என்று ஈழத்தமிழர்கள் சொல்வதுபோல நாமும் சொல்லலாமா?
அதென்னடா "இனத்துரோகி"? இதில் இருக்கும் இனம் என்கிற சொல் யாரைக் குறிக்கிறது என்று உங்களால் தெளிவாக சொல்ல முடியுமா?
உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களா, அல்லது யாழ்ப்பாண வெள்ளாளர்களும் அவர்களுக்கு ஏவல் செய்த ரவுடிகளும் மட்டுமே உங்கள் பார்வையின்படி தமிழ் இனமா?
இலங்கையில் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் தமிழனான மலையகத் தமிழனுக்கும் பிரபாகரனுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்குத் தெரியுமா?
அந்த மலையகத்தமிழன் என்றாவது பிரபாகரனை ஏற்றானா?
2009இல் இறுதிப்போர் நடந்து கொண்டிருந்தபோது பிரதான மலையகத் தமிழ் கட்சிகள் இலங்கை அரசில், அமைச்சரவையில் இருந்தன என்று உங்களுக்குத்தெரியுமா?

இலங்கைக்குள் இருந்த அந்த மலையகத்தமிழ் கட்சிகள் கூட பிரபாகரனுக்கு ஆதரவாக ராஜபக்ஷே அரசில் இருந்து விலகவில்லை என்றாவது உங்களுக்குத் தெரியுமா?
இலங்கையில் இருக்கும் மலையகத் தமிழனிடம்.
அந்த மலையகத் தமிழ் கட்சிகளைப் பார்த்து இனத்துரோகி என்று சொல்லிப்பாரேன். செருப்பால் அடிப்பான். அதுவும் பிய்ந்த செறுப்பால் சாணியில் முக்கி எடுத்து அடிப்பான்.
ஏனென்றால் பிரபாகரனின் பிள்ளைபிடி போராட்டம் பற்றி உன்னைவிட அவனுக்கு நன்கு தெரியும். புலிகளிடமிருந்து சொந்தப்பிள்ளைகளை பாதுகாக்க மலையகத்தமிழ் குடும்பங்கள் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
அதைவிட முக்கியமாக மலையகத்தமிழனை சக மனிதனாகக் கூட மதிக்காத யாழ்ப்பாணத்தமிழன்தான் பிரபாகரன் என்பதை பட்டுத்தெளிந்தவன் மலையகத் தமிழன்.
அதுமட்டுமல்ல, இலங்கை அரசும் இந்திய அரசும் சேர்ந்து குடியுரிமை பறித்து இலங்கையில் இருந்து விரட்டிவிட்ட லட்சக்கணக்கான மலையகத்தமிழனை வரவேற்று வாழவைத்தவர் கலைஞர் என்ற தமிழினத் தலைவர் என்கிற வரலாறு மற்றவனை விட நேரடியாகப் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழனுக்கு நன்றாகத் தெரியும்.
அந்த வரலாறெல்லாம் உங்களுக்குத் தெரியுமாடா முண்டங்களே?
மலையகத்தை விடு. கிழக்கு இலங்கைத் தமிழனையாவது சேர்த்துக் கொண்டாரா உன் பிரபாகரன்?
இலங்கையின் வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்கிறீர்களே? இலங்கை வரலாற்றில் வடக்கும் கிழக்கும் என்றாவது ஒன்றாக இருந்தது உண்டாடா ஞான சூனியங்களே?
இருந்ததே இல்லையடா முண்டங்களா!
அப்படி ஒன்றாக இல்லாத வடக்கையும் கிழக்கையும் ஒன்றாக்கியது இந்திய இலங்கை ஒப்பந்தம்.
ராஜீவ் காந்தியை கொல்லப்பட்டபோது பாதிக்கப்பட்ட ஒரே அரசியல் கட்சி திமுக. ஊருக்கு ஊர் அடிபட்டவன் திமுககாரன். ஒன்றுக்கு மூன்றுநாள் சிலர் வீட்டில் அடுப்பெரியவில்லையடா அயோக்கியப் பயல்களே!!அதெல்லாம் யாரால்? பிரபாகரனால்.
ராஜீவ் கொலைக்கு கருணாநிதியும், திமுகவும் தான் காரணம் என்று போஸ்டர் அடித்து ஓட்டுக்கேட்டு முதல்வரான ஈனப்பிறவி ஜெயலலிதா உங்களுக்கு ஈழத்தாயாடா?
ராஜீவ் கொலையை வைத்தும், கொலையாளிகளை வைத்தும் 25 ஆண்டுகளாக அரசியல் செய்தது யார்? ஜெயலலிதாவா? கலைஞரா?
இதே நளினியின் தூக்குதண்டனையை ஆயுள்தண்டனையாக கலைஞர் அவர்கள் குறைத்தபோது அதை எதிர்த்து வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவர் யார்? இதே ஜெயலலிதா தானே?
கலைஞருக்கும் புலிகளுக்கும் தொடர்பு என்று சொல்லி திமுக ஆட்சியை தேசத்துரோக ஆட்சி என்று சதிராட்டம் போட்டவர் சாட்சாத் இதே ஜெயலலிதா தானே?
கலைஞரை இனத்துரோகி என்பவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவன் "இனம்" என்று எதைச்சொல்கிறான் என்பதை முதலில் வரையறுக்கவேண்டும். அடுத்து அந்த "இனத்துக்கு" கலைஞர் என்ன "துரோகம்" செய்தார் என்பதை உரிய ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும். அதைவிட முக்கியமாக, அந்த "இனத்துக்கு" பிரபாகரன் செய்த நன்மைகள் என்ன என்றும் அவர்கள் பட்டியலிடவேண்டும்.
செய்யமுடியுமாடா?  நன்றி  எதிரொலி

கருத்துகள் இல்லை: