செவ்வாய், 4 ஜூலை, 2017

உச்ச நீதிமன்றம்... உரிமைகள் மறுப்பு நீதிமன்றம்.....

எந்த வழக்கைப் போட்டாலும் முதல் விசாரணையிலேயே தள்ளுபடி மட்டும் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் என்ற ஒன்று எதற்கு?
மக்களின் உழைப்பு, பணம், நேரம் மட்டுமில்லாது நீதிபதிகளாகிய உங்களின் நேரத்தையும், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களின் உழைப்பையும், அரசு நிதியையும் இங்ஙனம் வீண்டிப்பதற்கு பதிலாக, அதனை 'உரிமைகள் மறுப்பு மன்றம்' என்று அறிவித்து விட்டால், மக்கள் வெட்டியாக நீதிமன்றங்களை நம்பிக் கொண்டு வாழ்க்கையை விரயமாக்காமல் அவரவர் வேலையை பார்ப்பார்கள் அல்லவா?
இதில் வழக்கறிஞர்களாக வழக்கைத் தொடுத்து, அது தள்ளுபடியாகி கட்சிக்காரர்களிடம் திட்டுவாங்காமல், சோற்றிற்கு திண்டாடாமல், நாங்களாவது கூலி வேலைப் பார்த்து சுயமரியாதையுடன் வாழ்வோம்!

கருத்துகள் இல்லை: