ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

ஆச்சார்யா :எதிர்கட்சிகள் இல்லாத வாக்கெடுப்பு செல்லாது... எடப்பாடியின் அறிக்கையை ஆளுநர் இன்னும் ஏற்கவில்லை !

எதிர்கட்சி இல்லாத வாக்கெடுப்பு செல்லாது இதை திமுக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றால் வாக்கெடுப்பு செல்லாது என்ற தீர்ப்பை பெறலாம். கர்நாடகா வழக்கறிஞர் ஆச்சார்யா...
 trolljaya நம்பிக்கை ஓட்டில் வென்றதாக
எடப்பாடி அனுப்பிய அறிக்கையை
ஆளுநர் ஏற்கவில்லை.... ஆலோசனை கேட்டு அட்டார்னி ஜெனரலுக்கு அனுப்பி உ‌ள்ளதாக தகவல்.... சேடப்பட்டி முத்தையா ஒரு முக்கியமான தகவலைத் தெரிவித்திருக்கிறார். அதாவது ஒரு தீர்மானத்தை ஒரு முறைதான் முன்மொழிய முடியும். அந்தத் தீர்மானம் தோற்றுவிட்டால் மீண்டும் ஆறு மாதம் கழித்துத்தான் அந்தத் தீர்மானத்தை கொண்டு வரமுடியும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை ஒரு முறை தீர்மானத்தை முன்மொழிந்தார். ரகளை நடந்து அவை ஒத்திவைக்கப்பட்டபின், மீண்டும் ஒரு முறை தீர்மானத்தை முன்மொழிந்தார். அப்படியெனில் முதலில் கொண்டுவரப்பட்டபோது தீர்மானம் தோற்றுவிட்டது என்று பொருள். அப்படியெனில் ஆறு மாதங்கள் கழித்துத்தான் தீர்மானத்தை மீண்டும் முன்மொழியமுடியும். இந்நிலையில் அதேநாளில் சில மணிநேர இடைவெளியிலேயே எடப்பாடி பழனிச்சாமி இத்தீர்மானத்தை முன்மொழிந்ததோ அதற்குப் பின்னான நிகழ்வுகளோ ஓட்டெடுப்போ எதுவுமே சட்டப்படி செல்லாது என்கிறார். - #Shared

கருத்துகள் இல்லை: