செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

சட்டசபை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் முறையிட திட்டம்- மு.க. ஸ்டாலின் பேட்டி

சென்னை: தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாயலத்தில் பேட்டியளித்தார். அந்த பேட்டியின் முக்கியம்சங்கள் வருமாறு:-
 1. ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி முறையான அறிக்கை இல்லை
2. நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சட்டசபையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து  ஜனாதிபதியிடம் முறையிட திட்டம்.
3. எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு அறிவிப்பாகவே இருக்கும்.
4. தமிழ்நாடு கொள்ளைக்கும்பலிடம் மாட்டிவிடக்கூடாது.
5. பினாமி ஆட்சிக்கு எதிராக உண்ணாவிரதம்.
5. ஓ.பி.எஸ்.க்கு தி.மு.க. ஒருபோதும் ஆதரவு கொடுக்காது.
6. சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.
;7. ஜெயலலிதா சமாதியில் சசிகலாவின் சபதம் ஆத்திரத்தின் வெளிபாடு.
8. எனக்கு போட்டி என்று யாரும் இல்லை.
9. இந்த அரசு நான்கு ஆண்டுகள் நீடிக்கக் கூடாது. இது மக்களின் விருப்பம்.
10. வைகோ அரசியல் ஞானி.
11. 9 மாத காலமாக அதிமுக அரசு செயல்படவில்லை.
12. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க கவர்னரை தொடர்ந்து வலியுறுத்தினோம்.
13. கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
14. சட்டசபையில் தி.மு.க. வன்முறையில் ஈடுபடவில்லை.மாலைமலர்

கருத்துகள் இல்லை: