திங்கள், 20 பிப்ரவரி, 2017

நாட்டுமாடு சந்தைக்கு அழைப்பிதழ்! ஜல்லிக்கட்டு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி


ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு நாட்டு மாடுகள் வாங்குவதிலும் வளர்ப்பதிலும் தமிழக மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இயற்கை விவசாயம் செய்வதிலும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். நாட்டுமாடுகள் எங்கு கிடைக்கும், நாட்டு மாடுதானா என எப்படி பார்த்து வாங்குவது என பலரும் குழப்பத்தில் உள்ளனர். அப்படி குழப்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு தீர்வு, நாட்டுமாடுகள் மட்டுமே விற்பனை செய்யும் ஒரு சந்தை நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. இது வரை இல்லாத அளவில் நாட்டுமாடு சந்தைக்கு அழைப்பிதழ் அச்சடித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. நாட்டு மாடு வாங்க வேண்டும் என ஆர்வமுடன் இருப்பவர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் லைவ்டே

கருத்துகள் இல்லை: