ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சென்னையில் 3 வயது சிறுமி கடத்தி கொலை: சடலம் குப்பை தொட்டியில் வீச்சு!

பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் 
சென்னை, எண்ணூர் பகுதியை சேர்ந்த சிறுமி கிருத்திகா, நேற்று மதியம் அருகே உள்ள வீட்டுக்கு விளையாட சென்றார். பின்னர் சிறுமி மாலை நேரமாகியும் வீட்டுக்கு வராததால் கிருத்திகாவின் தாய் அங்கு சென்ற போது சிறுமியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிருத்திகா கிடைக்காததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மணலி விரைவுச்சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் உடலில் பலத்த காயங்களுடன், வாயில் துணியை வைத்து மூடிய நிலையில் சிறுமியின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் விசாரித்த போது, அது மாயமான சிறுமி கிருத்திகா என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் எண்ணூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.லைவ்டே

கருத்துகள் இல்லை: