வெள்ளி, 18 நவம்பர், 2016

வெங்கையா நாயுடு :ரூபாய் நோட்டு விவாதத்தில் பிரதமர் பதிலளிக்க மாட்டார்...அட வெங்காயமே கல்யாணம் பண்ணிப்பிட்டு ஒண்ணுமே செய்யமாட்டேன்னா..இன்னா அர்த்தம்?

டெல்லி: 500, 1, 000 ரூபாய் செல்லாதது என அறிவிக்கப்பட்டது தொடர்பான நடவடிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்க மாட்டார் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார். 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. Modi won’t reply to demonetisation debate in Parliament: Venkaiah இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வெங்கையா நாயுடு, 500, 1000 ரூபாய் தடை விவாதத்தை தொடங்கியவர்கள் தற்போது அது எதிர்மறை திசையில் போய்க்கொண்டிருப்பதை புரிந்து கொண்டு அவையில் விவாதத்தை நடத்தவிடாமல் தடுக்கின்றனர். அவர்கள் வெளிப்படையாக ஆதரவாகவும் இல்லை, எதிராகவும் கிடையாது. அவர்கள் குழப்பமான நிலையில் உள்ளனர். இந்த குழப்பமானது தொடரும். நாட்டு மக்களுக்கு தெரியும் யார் பதுக்கி வைப்பவர்கள், கருப்பு பணத்திற்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று. அதுபோன்று யார் மத்திய அரசுடனும், பிரதமர் மோடியுடனும் உள்ளனர் என்பதும் தெரியும். விவாதம் நடைபெற வேண்டும். அவையின் விதிகளின் படியும், முந்தைய நடவடிக்கைகளின் முன்னுதாரணங்களின் படியும் பிரதமர் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை, சம்பந்தப்பட்ட அமைச்சரும் மற்றவர்களும் பதில் அளித்தால் போதுமானது என்றார்.tamiloneindia.com

கருத்துகள் இல்லை: