சனி, 19 நவம்பர், 2016

ரூபாய் விவகாரம் நடிகர்களுக்கு லீக்கானது எப்படி? .. அதுவும் கரெக்டா மோடியின் அறிவிப்புக்கு முன்

சென்னை: கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவிக்கவிருந்த நேரத்தில் ரூ. 40 கோடி கடனை அடைத்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார். மோடியின் அறிவிப்பு சில பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகளுக்கு ஏற்கனவே தெரியும் என்ற பேச்சு உள்ளது. இந்நிலையில் கோலிவுட்டின் இளம் நடிகர் ஒருவர் மோடியின் அறிவிப்பு வெளியாகவிருந்த நேரத்தில் பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய ரூ.40 கோடி கடனை திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதனால் நடிகர் தப்பித்துவிட்டார். அவரிடம் இருந்து கடனை திரும்பப் பெற்ற பைனான்சியருக்கு தான் பல கோடி நஷ்டம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.அன்புதாய்ன்    கொஞ்சம் நஷ்டம் .. கமிஷன் கொடுத்து சமாளிச்சிடுவார்ல?

அது எப்படி நடிகர் மோடி அறிவிக்கும் முன்பு கரெக்டாக கடனை திருப்பிக் கொடுத்தார்.
அப்படி என்றால் அவருக்கு ஏற்கனவே மோடியின் அறிவிப்பு பற்றி தெரிந்திருக்குமோ என்று கோடம்பாக்கத்தில் பேச்சாக உள்ளது.//tamil.filmibeat.com

கருத்துகள் இல்லை: