சனி, 26 நவம்பர், 2016

ரூபாய் நோட்டு மாற்றத்தை நிதிஷ்குமார் ஆதரிக்கிறார்! "அரசியல்"

பாட்னா : பழைய ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வாபஸ் பெற்றது துணிச்சலான நடவடிக்கை என பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். துணிச்சலான முடிவு : பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதீஷ் குமார் தெரிவித்ததாவது: பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வாபஸ் பெற்றது மத்திய அரசின் துணிச்சலான நடவடிக்கை. இருப்பினும் அதனை அமல்படுத்துவதில் உள்ள குறைபாடுகளால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிளவு உண்டாகாது : பினாமி சொத்துகளையும் தடுத்தால் மட்டுமே கருப்புப் பண ஒழிப்பு தொடர்பாக சிறந்த தீர்வை எட்ட முடியும். மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிப்பதால், பிகாரில் உள்ள மகா கூட்டணியில் பிளவு ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.தினமலர்,காம்

கருத்துகள் இல்லை: