வெள்ளி, 25 நவம்பர், 2016

அழகிரி :தொகுதியையே வித்துட்டாங்க? அப்புறம்? தலைவருக்கிட்டே அப்பவே சொல்லிட்டேன்!

வேட்பாளரை மாத்துங்க. இல்லேன்னா ரொம்ப அசிங்கமா போகும்னு தலைவருக்கு தகவலை அப்பவே சொல்லியனுப்புனேன் ஆனால் தொகுதியை விற்று விட்டனர் என்று ஸ்டாலினை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார் அழகிரி.
By: Raj மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக பலத்த அடி வாங்கியது. திமுக வேட்பாளர் சரவணன் 42 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இடைத்தேர்தல் முடிவுகளை அடுத்து அவரது ஆதரவாளர்கள் அழகிரியை சந்தித்தனர். திமுக ஜெயிக்க வேண்டிய தொகுதி திருப்பரங்குன்றம். இப்படி பறிப்போயிட்டதே அண்ணே. நீங்க இருந்தா விட்டிருப்பீங்களா? தலைவர்ட்ட பேசுங்கண்ணே என்று புலம்பியுள்ளனர். அவர்களை சமாதனப்படுத்திய அழகிரி, வேட்பாளர் தேர்வு சரியில்லே. தொகுதியை விற்றுவிட்டனர் என்று கூறினாராம். வேட்பாளரை மாத்துங்க. இல்லேன்னா ரொம்ப அசிங்கமா போகும்னு தலைவருக்கு தகவலை அப்பவே சொல்லியனுப்புனேன். அவரும் அதை புரிஞ்சிக்கிட்டு சொல்லியிருக்காரு. கேட்க வேண்டியவங்க கேட்டாதானே? தொகுதியை விக்கிறதே அவங்க தானே. அப்புறம் எப்படி கேட்பாங்க என்று ஸ்டாலினை மறைமுகமாக அட்டாக் பண்ணிப்பேசிய அழகிரி, வெயிட் பண்ணுங்க. ஏற்கனவே தலைவர் நம்பிக்கை கொடுத்த மாதிரி நல்லது நடக்கும் என ஆதரவாளர்களிடம் பேசியுள்ளார்.tamiloneindia.com

கருத்துகள் இல்லை: