சனி, 26 நவம்பர், 2016

கர்நாடகாவில் ஒயின் கண்காட்சி ...150 பிராண்டுகள் ,10 சதவீத சலுகை!


மங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒயின் கலாச்சாரம் மற்றும் ஒயின் குடிப்பதால் ஏற்படும் சுகாதார நலன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மங்களூரில் இன்று ஒயின் திருவிழா தொடங்கியது. கர்நாடக ஒயின் வாரியம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் நடத்தப்படும் இந்த ஒயின் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில், 12 ஒயின் ஆலைகளின் 150-க்கும் மேற்பட்ட பிராண்டு ஒயின்கள் கண்காட்சியில் வைக்கப்பட உள்ளது. இவை அனைத்தும் 10 சதவீத தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒயின் கண்காட்சி-விற்பனை தவிர ஒயினுடன் கூடிய உணவகங்கள், இசைநிகழ்ச்சி, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. மேலும், இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக, ஒயின் தயாரிப்பதற்காக திராட்சை குவியல்களை பார்வையாளர்கள் மிதித்து நசுக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இத்தகவலை ஒயின் வாரிய தலைவர் ரவீந்திர சங்கர மிர்ஜே நிருபர்களிடம் தெரிவித்தார். கர்நாடகாவில் ஒயின் உற்பத்தி மற்றும் விற்பனையை பல்வேறு வகைகளில் ஒயின் வாரியம் ஊக்குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com

கருத்துகள் இல்லை: