செவ்வாய், 8 நவம்பர், 2016

நடுத்தர சாமான்ய மக்களின் ஆணிவேர் புடுங்கப்பட்டது?

அவசரப்பட்டு கருத்து சொல்லகூடாது.. ஆனால் ஏன் இந்த அவசரம்?
இந்தியாவை பொறுத்தவரை கார்பரேட் மட்டுமே கணக்கு வழக்கு வைத்திருக்கும்..அவர்கள் பப்ளிக் ஃப ண்ட ஷேர்களில் நடக்கும் லிமிட்டட் கம்பெனிகளாகதான் இருக்கும்.
அது இந்தியாவின் ஒரு சிறு மேம்பட்ட வர்க்கத்தின் தொழில் .
unorganized செக்டார்கள் இந்தியாவில் ஏராளம்..அவர்கள்தான் நடுத்தர வர்க்கத்தின் ஆணி வேர்.
எடுத்துக்காட்டாக பளம்பர், ஆசாரி, பெயிண்டர், மேஸ்திரி, பல்வேறு கட்டிட தொழில்கள், இரும்பு பழைய சாமான் தொழில்கள் இன்னும் ஆயிரகணக்கான தொழில்கள் கரண்ட் அக்கவுண்ட் கூட இல்லாமல் கொடுக்கல் வாங்களில் நடக்கும்.

மும்பாய் சேரி பகுதிகளில் லட்சக் கணக்கில் வியாபாரம் நடக்கிறது. சரி தவறு என்பதில்லை. நடுத்தர வர்க்கத்தின் ஒரு பக்கம்..இது இந்தியா.
ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலம் புலம் வாழ் தொழிலாளர்கள் கையில் சேமிப்பு இருக்கும்.
பல கோடி மக்கள் இன்னும் ஆதார், பான் நம்பர் வைத்திருக்கவில்லை.
முக்கியமாக ரேஷன் கார்ட் இல்லாதவர்கள் கூட எக்கச்சக்கமாக இருக்கும் நாடு இது.
எதை நம்பி இந்த சட்டம்?
மனதில் கருப்பு சூழ்கிறது.
எப்படி சிறு வியாபாரிகள் இதை சமாளிக்க முடியும்..
எனினும் காத்திருப்போம்.
மோடி மஸ்தான் வேலை இல்லை என்று நம்புவோம்.>Kirthika Tharan< முகநூல் பதிவு /a>
 Mohamed Arif :  ஜெட்லீ பணத்தை ஏற்கனவே மாத்தி வச்சிகிட்டாராம் அது போல தான் அம்பானி அதானி எல்லாம் டாலரில் மாத்தி வச்சு நமக்கு ஆப்பு வச்சிட்டாங்களே .... என்னவோ இந்தியாவில் 90% கள்ளப்பணம் நடமாடுவதை போல தான் நடவடிக்கை ... முட்டுச்சந்து மூதேவி எதுக்கோ காலே தூக்கிச்சாம் ... பாப்போம் எதுக்கு தூக்குச்சுன்னு .. முகநூல் பதீவு

கருத்துகள் இல்லை: