
கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக
வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு முறையான
ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும் என்று
பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: 500, 1000
ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து ஒரே இரவில் அனைவரையும் அதிர
வைத்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி அடுத்தடுத்த அதிரடிக்குத் தயாராகி
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஒரே இரவில் அதிரடியாக 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பீதியை கிளப்பி யுள்ளது. இது முதல் கட்டம் என்றும் கருப்புப் பணம் ஒழிப்புதொடர்பாக
மோடி மேலும் பல திட்டங்களை வைத்துள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அந்த
வகையில் கருப்புப் பண ஒழிப்பில் அடுத்த கட்டமாக பேங்க் லாக்கரில்
பாதுகாப்பாக வைக்கப்படும் நகைகள் 600 கிராமுக்கு மேல் இருந்தால், அதற்கு
முறையான ஆவணங்கள் காண்பிக்கப்பட வேண்டும். இல்லையெனில் வரி விதிக்கப்படும்
என்று பிரதமர் மோடி அறிவிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.நம் வீட்டு பீரோக்களை விட ஆயிரம் மடங்கு பாதுகாப்பானவை வங்கி லாக்கர்கள். தீயாலோ, தண்ணீராலோ பாதிக்கப்படாத அளவுக்கு கனமான உலோகத்தால் அவை செய்யப்படுகின்றன. இந்த லாக்கர் பெறுவதற்கான முதல் தகுதி, அந்தக் குறிப்பிட்ட வங்கிக் கிளையில் வாடிக்கையாளராக இருக்க வேண்டும். வங்கிக் கணக்கு இருந்தாலும் அதைத் தொடர்ந்து பயன்படுத்துவராகவும் இருக்கவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக