புதன், 9 நவம்பர், 2016

இதுதாண்டா டுபாக்கூர் ஆட்சி .. வெறும் 7% வீதம் பேர் மட்டுமே வங்கி மூலம் சம்பளம் பெறுகின்றனர் . மீதி 93 % வீதம் பேர்கள் நிலை?

1. இப்ப நான் ஒரு செய்தி படிச்சேன். நெட்ல நோண்டியபோது கிடைச்சது.233 மில்லியன் மக்களுக்கு வங்கி அக்கவுண்ட் கிடையாது.
இந்தியாவில் 93% வந்து இன்ஃபார்மல் செக்டார்தான். அதாவது, இந்தியாவில் வெறும் 7% மட்டுமே பக்காவாக வங்கி அக்கௌண்ட்கள் மூலம் சம்பளம் பெறுகின்றனர். பாக்கி 93%, சம்பளக்கவர்களில்தான் பணம் பெறுகின்றனர். அதாவது, தினக்கூலிகள் முதலியவர்கள். இவர்களின் சேமிப்பும் பணமாகத்தான் அவர்களிடமே உள்ளது. இவர்களுக்கு ,அதாவது, குறைந்தபட்சம் 233 மில்லியன் மக்களுக்கு வங்கி அக்கௌண்ட்கள் கிடையாது என்பது குறைந்த பட்சத் தகவல். இணையம் அப்படித்தான் சொல்லுது
இவர்கள் நாளை முதல் என்ன ஆவார்கள்? இவர்களின் சேமிப்பின் கதி என்ன? டிசம்பர் கடைசிவரை மாற்றிக்கொள்ளலாம் என்றாலும், இவர்களுக்கு நாளை முதல் வழங்கவேண்டிய தினசரி சம்பளத்தின் நிலை என்ன? நாட்டின் 93% மக்களின் சம்பளத்தேவையைப் பூர்த்தி செய்யும்வகையில் வங்கிகள் தயார் நிலையில் உள்ளனவா? எல்லாருக்கும் 100 ரூவாய்லதான் சம்பளம் கொடுக்கணும். அதான் மேட்டர். தயாரா?

2. புதுசா இண்ட்ரோ கொடுக்கும் 500, 2000 நோட்டுகளில் கறுப்புப் பணத்தைத் தடுக்க இவர்களின் மெஷர்கள் என்ன?
3. தங்கம், ப்ராப்பர்ட்டி, ஹவாலா, பினாமி... இதெல்லாம் வெச்சிப் பரவியிருக்கும் கறுப்புப் பணம்தான் இந்தியாவில் மிக அதிகம். இதை எப்படித் தடுக்கப்போறாங்க?
4. இதுதான் மிக முக்கியமான பாயிண்ட்டா எனக்குத் தோணுது. உத்தரப்பிரதேசத் தேர்தலின் தேதி என்ன?
வந்தார்கள் வென்றார்கள்ல முகம்மது பின் துக்ளக் பத்தி ஒரு ரெஃபரன்ஸ் இருக்கும். இந்தியாவில் முதன்முறையா நாணயம் அறிமுகப்படுத்தியது அவர்தான். ஆனால் கள்ள நாணயங்கள் உடனுக்குடன் தயாரிக்கப்பட்டதால், ஒருநாள் திடீர்னு, இதுவரை அடித்த நாணயங்கள் செல்லாதுன்னு அறிவிச்சார். முறைப்படி சேர்த்து வைத்தவனுங்களும் உடனடி போண்டி.நடுத்தெரு. அடுத்த நாள், முறைப்படி கணக்குக் காட்டினால் கஜானாவில் இருந்து பணம் தரப்படும்னு சொன்னார். அப்படி செஞ்சதில் மூணே மாசத்தில் அரசு கஜானாவே காலி.
கறுப்புப் பணம், பணமா மட்டும்தான் இருக்கா? அது எப்பவோ ரெகுலரா கன்வெர்ட் ஆகி வெளிநாடுகளில் என்னன்னமோ வகையா மாறியாச்சு. இப்போ இந்த திடீர் அனௌன்ஸ்மெண்ட்டால் ஏமாறப்போறவங்க கட்டாயம் உண்டு. உள்ளூர்ல கத்தை கத்தையா பணத்தைக் கறுப்பா வெச்சிருக்குறவங்க.. அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் இதெல்லாம் மிகமிகக் கம்மி பர்சண்டேஜ் மட்டுமே. நம்ம அரசியல்வாதிகளுக்கும் பண முதலைகளுக்கும் பணத்தை எப்படியெல்லாம் மாத்தலாம் என்பதைச் சொல்லியா தரணும்?
மோதி அரசு கறுப்புப் பணத்துக்கு எதிரா எதுவுமே செய்யல என்ற வாதத்தை இந்த அறிவிப்பு தடுக்கப் பார்க்குது. அவ்வளவே. பேப்பரில் இது ஒரு செம்ம திட்டம். ஆனால் ப்ராக்டிகலாக இதனால் எந்தப் பயனும் இல்லை என்பது என் கருத்து. தேர்தல்கள் நெருங்குது.திடீர் அறிவிப்பு தேவை. அதான் இது என்பதே எனது எண்ணம். இது ஏன் இப்படி நினைக்கிறேன் என்பதுக்குப் பல காரணங்கள் உண்டு. சிலவற்றை மேல சொல்லீருக்கேன். அரசியல்வாதிகள் இதுபோல் அறிவிப்பதைக் கேள்வியே கேட்காமல் என்னால் கண்மூடித்தனமாகக் கொண்டாட இயலாது. அது காங்கிரசா இருந்தாலும் சரி, கம்மியூனிஸ்டா இருந்தாலும் சரி.. பீஜேபியுந்தான். அதிமுக, திமுக.. எல்லாமே இதில் அடக்கம். தனக்கு எதைப் பண்ணிக்கணுமோ அதெல்லாம் நல்லாப் பண்ணீட்டுதான் இதுபோன்ற ‘ரகசிய’ ப்ளான்கள் எல்லாம் அறிவிக்கப்படும் என்பதை நம்புறவன் நானு.
அவ்ளதான், நன்றி. வணக்கோம்.
முகநூல் பதிவு Karundhel Rajesh

கருத்துகள் இல்லை: