வெள்ளி, 6 நவம்பர், 2015

குஷ்பு ஆவேசம் என்னை சீண்டினால் புலியாக மாறிவிடுவேன்! தங்கபாலு மாட்டிக்கிட்டார்...

பேட்டி கொடுத்து என்னை தேவையில்லாமல் சீண்டினால் புலியாக மாறிவிடுவேன் என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் வலுத்துவருகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இவர்களது ஆதரவாளர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநாடு திருப்பூரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகை குஷ்பு, ’’நான் அமைதியாக இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என்னை சீண்டினால் புலியாக மாறி விடுவேன். காங்கிரஸை நம்பி நான் உள்ளேன். தொண்டர்கள்தான் காங்கிரஸ் கட்சியின் பலம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. ஈரோட்டின் மருமகள் நான். தைரியமான தலைவர் இருப்பதால் நானும் தைரியமாக உள்ளேன். திமுகவில் இருந்து வெளியேறியது ஏன்? என்ற காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்கிறார்கள். நான் எதற்காக வெளியேறினேன் என்பதை திமுக தலைவர் கலைஞர் அறிவார். அவர் மீது நான் தனிப்பட்ட மபியாதை வைத்துள்ளேன். அதைப்பற்றி நான் வெளியில் கூற வேண்டிய அவசியம் இல்லை. பேட்டி கொடுத்து என்னை சீண்டுபவர்கள் தைரியம் இருந்தால் நேரடியாக பேச வேண்டும்’’ என்று ஆவேசமாக சீறினார்  நரசிம்மராவ் காலத்தில் இருந்து  தங்கபாலு அமைச்சராக கஸ்ட்டப்பட்டு சம்பாதித்தது போதாதா?  இளங்கோவனின் ஒழுக்கம் பற்றி இவர் வகுப்பெடுத்தது   மறைமுகமாக குஷ்புவை குறிவைத்துதான் என்பது நன்னா வெளங்குது உங்க கிரகம் இப்போ  சரியில்லையே... nakkheeran.com

கருத்துகள் இல்லை: