திங்கள், 2 நவம்பர், 2015

தனித்து வெற்றி பெற்ற சிவசேனா..கல்யாண்– டோம்பிவிலி நகராட்சியை கைப்பற்றியது

கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாரதீய ஜனதாவும் தனித்து நின்று போட்டியிடுவதால் மிக முக்கியமானதாக கருதப்பட்ட கல்யாண் – டோம்பிவிலி நகராட்சி தேர்தலில் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது. 122 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் நேற்று காலை முதலே வாக்குச்சாவடிகளில் திரண்ட வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் ஓட்டுப்பதிவு செய்தனர். நேற்று மாலை நிலவரப்படி 47 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தன. இந்நிலையில் சற்று முன் இந்த தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சிவசேனா 52 இடங்களையும், பா.ஜ.க 41 இடங்களையும் காங்கிரஸ் மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா ஒற்றை இலக்கம் கொண்ட இடங்களையும் கைப்பற்றியது. மத்தியில் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து சிந்தித்து வரும் சிவசேனாவின் இந்த வெற்றி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது maalaimurasu.com

கருத்துகள் இல்லை: