வெள்ளி, 27 மார்ச், 2015

அதிகவிலையில் ஸ்பெக்ட்ரம் ஏலம் பொதுமக்கள் தலையில் வந்து விழும்! ராசா கூறியதுதான் சரி!

புதுடில்லி: ''தொலைத் தொடர்பு அலைக்கற்றைகளான, 'ஸ்பெக்ட்ரம்' ஏலத்தை, அதிக விலைக்கு தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாங்கியுள்ளதால், அவற்றின் ஒட்டுமொத்த கடன், 3.5 லட்சம் கோடியாக உயரும். ''இதனால், தொலைத் தொடர்பு கட்டணங்கள் உயர்த்துவதைத் தவிர, இந்த நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை,'' என, 'அசோசேம்' எனப்படும், இந்திய வர்த்தக சபையின் (தொலைத் தொடர்பு) தலைவர், டி.வி.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.நேற்று முன்தினம் நிறைவடைந்த ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம், 1.09 லட்சம் கோடி ரூபாயை, மத்திய அரசு திரட்டியுள்ளது. அரசு நிர்ணயித்த விலையை விட, கூடுதலாக, 68 சதவீத பிரீமியத்தில், ஸ்பெக்ட்ரம் ஏலம் எடுக்கப்பட்டுள்ளதால், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கடன் பளு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, வேறு வழியின்றி, தொலைத் தொடர்பு சேவைகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்படும் என்பது, ராமச்சந்திரனின் கருத்து தினமலர்.com  ஆ.ராசா இதைதான் அடித்து கூறினார் ஸ்பெக்ட்ரம் என்பது மக்களுக்கு சேரவேண்டிய சேவை அதில் அதிக லாபம் பார்க்க கூடாது என்றார் . இதனால்தான் மன்மோகன் சிங்கும் ஆதரித்தார். பிரம்மஸ்ரீ கிரிமினல் ஊடஹங்களும் ஒட்டு மொத்த சுயநலமிகளும் சேர்ந்து இதோடு ராசாவும் திமுகவும் ஒழியவேண்டும் என்று பிரசாரம் செய்தார்கள். இனி மக்கள் படிப்பார்கள்

கருத்துகள் இல்லை: