புதன், 23 ஜூலை, 2014

SunTV பங்குகள் சரிவு ! மாறன் பிரதேர்சுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வலுக்கிறது !

சென்னை: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் மற்றும் முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன் இருவரையும் குற்றம்சாட்ட போதுமான சாட்சியங்கள் தயாராக உள்ளது என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி புதன்கிழமை காலையில் தெரிவித்தார். இதனால் சன் டிவி நிறுவன பங்குகள் சுமார் 7 சதவீதம் சரிந்தது. ஏர்செல்-மேக்சிஸ் நிறுவனத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லை என்றாலும், மாறன் சகோதரர்களுக்கு உண்டு. இந்நிலையில் வலுக்கட்டாயமாக சிவ குழுமத்தின் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசிய மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட பின்பே முன்னாள் தொலைதொடர்பு அமைச்சர் 2ஜி அலைக்கதிரை ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கியதாக வழக்கில் உள்ளது.முரசொலி மாறனின் மனைவி ஒரு பார்பனர் , கலாநிதியும் தயாநிதியும் திருமணம் முடித்த பெண்களும் பார்ப்பனர்கள் . பார்பனீயம் எப்படி திமுகவை விழுங்குகிறது  பார்த்தீரா ? திமுகவை பிடித்த ஏழரை ... இவிய்ங்க தாய்ன்
இதற்கான முக்கிய ஆதாரங்கள் அனைத்தும் உள்ளதாக முகுல் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணை மேலும் சூடு பிடிக்க துவங்கியது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை இன்னும் முடப்படதாக நிலையில் சன் குழுமத்திற்கு மேலும் ஒரு தலைவழியாக மேக்சிஸ் வழக்கு கிளம்பியுள்ளது.
அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி அளித்த தகவல் இந்தியா முழுவதும் பேஸ்புக்கை விட வேகமாக பரவியது இதனால் சன் டிவி நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் பங்கு வர்த்தகம் 459 என்ற நிலையில் துவங்கி 415 ரூபாய் வரை சரிந்தது. இதனால் இன்று காலை வர்த்தகம் துவங்கி முதல் இந்நிறுவனத்தின் பங்குகள் 9.60 சதவீதம் சரிவை தழுவியது
சிபிஐ மேலும் முகுல், தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் இருவரையும் இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்ய போதுமான தகவல்களை உள்ளதாகவும், மாறன் சகோதரர்கள் செய்த முறைகேடான விஷயங்கள் மற்றும் ஏர்செல் மற்றும் மேக்சிஸ் ஒப்பந்தத்தில் உள்ள குளறுபடிகள் உள்ளடக்கிய அறிக்கையை சிபிஐ அதிகாரிகளிடம் அளித்தார்.
மாறுபட்ட கருத்துகள் முகுல் அளித்த சாட்சியங்களை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள் மாறன் சகோதரர்களை விசாரணை முடிவு செய்திருக்கும் வேலையில், சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா முற்றிலும் மாறுபட்ட கருத்தை தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் சிபிஐ சுப்ரீம் கோர்ட்டில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது, இதில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கை ஆய்வு செய்ததில் மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணன் அவர்களுக்கும் இந்த வழக்கிற்கு எந்த விதமான சம்மந்தம் இல்லை என்று மலேசிய அரசு தெரிவித்துள்ளதாக இந்த அறிக்கையில் இருந்தது.
சன் டிவி பங்கு 10 சதவீதம் சரிந்திருக்கும் நிலையில் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகள் 0.56 சதவீதம் வளர்ச்சியை சந்தித்துள்ளது.
/tamil.goodreturns.in/

கருத்துகள் இல்லை: