சனி, 17 மே, 2014

நினைச்சது ஒண்ணு.நடந்தது ஒண்ணு தொங்கு பாராளுமன்றம் இல்லையே ?

ஒரு வாசகனின் கற்பனை கேள்வியும் கற்பனை  பதிலும் !மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவீர்களா? ஜெ: அப்படி ஒரு
சூழ்நிலை இல்லை.நான் நினைச்சது ஒண்ணு.நடந்தது ஒண்ணு தொங்கு பாராளுமன்றம் ஏற்படும். நானே நாட்பதிலும் வெற்றி பெற்றால், எனது தயவு மோடிக்குக் கட்டாயம் தேவை. அப்போது வேண்டிய அமைச்சரவை பொறுப்பையும் பேரம் பேசி பெற்று விடுவதுடன், தானும் போட்டியின்றி ராஜ்ய சபா உறுப்பினராகி, சட்டத்துறை அமைச்சராகி, தன் மீதுள்ள பயங்கரமான இந்த கிரிமினல் வழக்கை ஊதித் தள்ளிவிடலாம் என்ற கனவு இப்போது பொய்த்து விட்டதே? எனது தயவு தேவை இல்லாமலே, மக்கள் மோடிக்கு இவ்வளவு வாக்கு அளித்து பிரதமராக்கிவிட்டனரே என்ற ஆதங்கம் எனக்குள் எவ்வளவு வேதனையாக இருக்கிறது இனி டெல்லி பாராளுமன்றம் ஒரே இந்திக்கார்களின் கூட்டம்.எனது எல்லா (37) கட்சி உறுப்பினர்களும் மந்தி போல வாயைப் பிளந்துகொண்டு அவர்களின் பேச்சை என்ன பேசுகிறார்கள் என்று எதுவுமே புரியாது, வேடிக்கை பார்ப்பதிலேயே இரு ஆண்டுகள் ஓடிவிடும்.நான் சென்று பேசினாலாவது, மேஜையை தட்டி தூசி ஓட்டுவார்கள்.வழக்கம்போல இந்தி புரியாமல், எல்லா கழகக் கண்மணிகளும் சந்தியில் நிற்பது நிச்சயம் எது எப்படி போனாலும், எனது வழக்குக்கு இனி விடிவே கிடையாதா? எத்தனை பேர் ஜெயித்து எனக்கு என்ன புண்ணியம்? நான் மாடாய் உழைத்து சேர்த்து வைத்த இத்தனை சொத்துக்களும் இனி மன்னார்குடி கும்பல் காலி செய்துவிடுமே என்ற அச்சத்தில்தான், கோடி கோடியாக,பிரவீண்குமார் தயவோடு தேர்தலுக்காகத் தண்ணீராக செலவிட்டேன்.பன்னீருக்கு வேண்டுமானால் மகிழ்ச்சியாக இருக்கலாம் புதிய பதவிக்காக நான் கண்ணீர் விட்டு அழுவது யாருக்குத்தெரியப் போகிறது?

கருத்துகள் இல்லை: