ஞாயிறு, 8 டிசம்பர், 2013

முடிவுகளை அடக்கத்துடன் ஏற்று கொள்கிறேன் : சோனியா

புதுடில்லி: காங்கிரசுக்கு பாதகமான முடிவுகள் வந்த நேரத்தில் இன்று மாலையில் காங்., தலைவர் சோனியா நிருபர்களிடம் பேசுகையில்: தேர்தலில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். முடிவுகளை தான் அடக்கத்துடன் ஏற்று கொள்கிறேன். இருப்பினும் இது குறித்து முறையான ஆய்வு செய்யப்படும். வரவிருக்கும் பொது தேர்தல் மாநில அளவில் நடக்கும் தேர்தலில் இருந்து சற்று வித்தியாசமானது. தற்போது நடந்திருப்பது மாநில அளவிலான பிரச்னைகள் குறித்தது ஆகும். இவ்வாறு அவர் கூறினார்தொடர்ந்து நிருபர்களிடம் ராகுல் பேசுகையில்: இந்த முடிவுகள் எங்களுக்கு ஒரு தகவலை தந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள தோல்வி குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியுள்ளது. மக்கள் எங்களுக்கு கடும் எச்சரிக்கையை தந்துள்ளனர். அவர்கள் தேவைக்கேற்ப நாங்கள் எங்களை மாற்றிக்கொள்வோம். சாதாரண மனிதனுக்கு குரல் கொடுக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆம் ஆத்மி மீது மக்கள் பலரும் இணைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதன் மூலம் நாங்கள் பாடம் கற்க வேண்டியுள்ளது. சாதாரண மனிதனை எங்கள் இயக்கத்தில் இணைக்க இன்னும் பாடுபடுவோம். மோடியை பொறுத்தவரையில் அவர் பா.ஜ க.,வுக்கு தலைவர் , பா.ஜ.க, தாங்கள் கருத்து வேறு, எங்களின் நோக்கம் வேறு, நாட்டின் முன்னேற்றத்தை நாங்கள் விரும்புகிறோம். அவர்கள் அப்படி அல்ல. காங்கிரஸ் இந்த நாட்டின் கனவை நிறைவேற்ற பாடுபட்டு வருகிறது. இவ்வாறு ராகுல் கூறினார்.

கருத்துகள் இல்லை: