ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மோடி கலந்து கொள்ள இருந்த மைதானத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன ! ஆனாலும் கலந்து கொள்கிறாராம் !

பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள
பொதுக்ககூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் பதற்றம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்ததால் கூட்டத்திற்கு வந்த மக்கள் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். ஏற்கனவே பாட்னாவில் 3 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது மைதானத்தில் குறைந்த சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பேர்காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாட்னாவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பை பொருட்படுத்தாமல் பா.ஜ.க பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றுள்ளார். dinakaran.com

கருத்துகள் இல்லை: