செவ்வாய், 29 அக்டோபர், 2013

வறுமைக்கும் ஜாதிக்கும் உள்ள தொடர்பு ! தாழ்த்தப்பட்ட மக்களின் வறிய நிலை ஜாதியும் காரணமா ?

புதுடில்லி, அக்.27- ஜாதிக்கும் வறுமைக் கும் உள்ள தொடர்பு கள் குறித்து
11ஆவது அய்ந்தாண்டுத் திட் டத்தில் வெளியான தகவல்கள் மிக முக்கிய மானவை. அது குறித்து தகவல்கள் வருமாறு: தலித் மக்களின் வீடு களில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந் தைகள் ஒரு வயது முடி வதற்குள் இறக்கின்றன. தலித் அல்லாதோர் வீடு களில் இந்த விகிதாச் சாரம் 1,000: 61.< அய்ந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந் தைகள் 1,000-இல் 39 இறந்து விடுகின்றன. தலித் அல் லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22.< தலித் குழந்தைகளில் 75 நோஞ்சானாக இருக் கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49 .
2000 ஆண்டு கணக் குப்படி 66 தலித் குடும் பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங் களில் இது 33 .
முக்கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளர்கள்
தலித் மக்களில் முக் கால்வாசிப் பேர் கூலித் தொழிலாளிகள். இதர ஜாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால் வாசியாக உள்ளது.
- இந்திய ஜாதிய சமூகம் என்கிற ஒரு பானை சோற்றில், மேலே சொல் லப்பட்ட புள்ளி விவ ரங்கள் ஒரு சோறு பதம்.
மொத்தப் பானையை யும் நீங்கள் பார்வையிட வேண்டுமா? அதற்கு முதலில் பேராசிரியர் சுகதேவ் தோரட்டுக்கு நன்றி சொல்ல வேண் டும். அவர் தலைமையில் 11-ஆவது அய்ந்தாண்டு திட்டக் காலத்தில் (2007-12) மத்திய அரசு அமைத்த பட்டியல் ஜாதியினர் திறன் வளர்ப்புக்கான பணிக் குழுவின் ஆவ ணங்கள்தான் அந்தப் பானை.
கருவில் உருவாவது முதல் கல்லறை வரை தலித் மக்களின் வாழ்க் கைச் சூழல், மற்ற ஜாதி யினரைவிடக் கூடுதல் வறுமையில் வாடுவதை இந்த ஆவணங்கள் படம் பிடிக்கின்றன.
ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வுகள் தேவை
பொதுவாக, இந்திய சமூகத்தில் ஜாதி ரீதியான பொருளாதார ஆய்வு கள் அதிகமாக வருவ தில்லை. அத்தகைய கருத்துகள் விவாதிக்கப் படுவதைத் தவிர்க்கவே முயல்கின்றனர். அத்த கைய சூழலை மீறி வந்தி ருக்கும் இத்தகைய ஆதா ரங்கள் இந்தியாவில் உள்ள வறுமை பழங்குடி வறுமை, தலித் வறுமை, பிற்படுத்தப்பட்டோர் வறுமை,உயர் ஜாதியினர் வறுமை எனப் படிநிலை ஏற்றத்தாழ்வோடு இருப் பதை வெளிப்படுத்து கின்றன.
அம்பேத்கர் உருவாக் கியதால் இந்திய அரசி யல் சாசனம் இந்திய மக்களிடையே உள்ள படிநிலை ஏற்றத் தாழ்வை அக்கறையோடு பார்க்கிறது. அதனால் தான் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை அனைத்துக் குடிமக்க ளுக்கும் சமூகரீதியிலான, பொருளாதாரரீதியிலான, அரசியல்ரீதியிலான நீதி வழங்குவது என்பது தான் முதல் குறிக்கோள் என்று கூறுகிறது. தலித் மக்களின் மீது பிற்படுத் தப்பட்ட நிலையும், சமூகரீதியான இயலா மையும் திணிக்கப்பட் டுள்ளதை அரசியல் சாச னம் இனம் கண்டிருக் கிறது. அதனால், அரசி யல் சாசனத்தில் சிறப் பான பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட் டுள்ளன.
ஆனால், அரசியல் சாசனத்தின் சமூகநீதி, அரசின் செயல்பாடு களில் வர மாட்டேன் என்கிறது. அரசு இயந் திரத்தில் ஆதிக்க ஜாதி உணர்வுகள் ஆழமாக வேரோடியிருப்பதுதான் அதற்குக் காரணம். அத னால், தலித் மக்களுக் கான, நல்ல பயன்களைத் தரும் திட்டங்கள் நத் தையைத் தோற்கடிக்கும் வேகத்தில் நகர்கின்றன. அரசுக்கு வெளியே இருந்து வருகிற நெருக் குதல்களும் போதுமான அளவு வலுவானதாக இல்லை.
தலித் மக்கள் முன்னேற்றம்
ஜாதி அடுக்குகளைத் தக்கவைத்துக்கொண்டே பொருளாதார வளர்ச்சி அடைய இந்திய சமூகம் முயல்கிறது. ஜாதிய மேல் அடுக்கில் உள்ளவர்க ளுக்கு மேலும் மேலும் சிறந்த வாய்ப்புகள் கிடைத்து முன்னேறிச் செல்லும்போது, அவர் களால் கைவிடப்படுகிற இடங்களைப் பிடித்து தலித் மக்கள் முன்னேற லாம்.
அதனால் பிரச் சினை வராது. ஆனால், மேல்தட்டில் உள்ளோ ருக்குச் சமமாக முன் னேற முயன்றாலோ, அது ஜாதியின் படி நிலையை மீறுவதாகக் கருதி, தலித் மக்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது பொதுவான போக்காக இருக்கிறது.
சமூகத்தில் பொரு ளாதாரரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட நிலை யில் தலித் மக்கள் உள் ளனர். எனவே, அவர் களுக்கு மற்றவர்களை விடக் கூடுதல் பயன்கள் அளிக்கப்பட வேண்டும். முதலில் அவர்களின் வறுமை மற்றவர்களின் வறுமையோடு சமப் படுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் வறுமை ஒழிப்பைப் பற் றிய விவாதம் அர்த்த முள்ளதாக இருக்கும். இது தலித் மக்களின் பிரச்சினை அல்ல. இந் திய சமூகத்தின் ஜன நாயகப் பிரச்சினை

கருத்துகள் இல்லை: