வெள்ளி, 24 மே, 2013

ராகுல் எச்சரிக்கை: அம்மா போல நான் soft இல்லை ! வதேரா போல shrewd ?

புதுடில்லி:காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படிப்பட்டவன் அல்ல. கட்சியில் ஒழுங்கீனத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது' என, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் எச்சரித்துள்ளார்.டில்லி மாநில காங்கிரஸ் தலைவர்களுடன், ராகுல், நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய செயலர்கள், கவுன்சிலர்கள் என, அனைவரையும் தனித்தனியே அழைத்து ராகுல் பேசினார்.அப்போது, ராகுல் பேசியதாக, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:காங்கிரஸ் கட்சியினர், கோஷ்டி பூசலை தவிர்த்து, ஒற்றுமையாக செயல்படவேண்டும். கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டில்லியில், முதல்வர் ஷீலா தீட்சித் அரசின் சாதனைகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சாதனைகளையும், மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என, ராகுல் கேட்டுக் கொண்டார்.காங்கிரஸ் தலைவர் சோனியா மென்மையானவர்; நான் அப்படி அல்ல. கட்சியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் மற்றும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன் என, எச்சரித்தார். இவ்வாறு, தகவல் அறிந்த   வட்டாரங்கள் கூறின.

கருத்துகள் இல்லை: