வெள்ளி, 24 மே, 2013

அஜீத்தை பற்றிய ஒரு முக்கியமான செய்தி ! ரொம்ப முக்கியம்


திரைப்படத்தின் முக்கியமான கிளைமாக்ஸ் ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்க விஷ்ணுவர்தன் படக்குழு சில நாட்களுக்கு முன்பே குலுமனாலி சென்று படப்பிடிப்பிறகான ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தது. படப்பிடிப்பிற்காக வீட்டிலிருந்து கிளம்பிய அஜித் வழக்கம்போல் ஃபிளைட்டில் செல்லாமல் தனது காரிலேயே குலுமனாலி பயணமாகியிருக்கிறார்.செல்லும் வழியில் இருக்கும் இயற்கையை ரசித்தபடியே குலுமனாலி சென்ற அஜித் ஓய்வெடுத்த பிறகு தான் வருவார் என்று மற்ற பணிகளில் ஈடுபட்டிருந்த படக்குழு பயணக்களைப்பை போக்காமலேயே படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்த அஜித்தைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தார்களாம்.அஜித் வந்து சேர்ந்ததும் பரபரப்பாக படப்பிடிப்பு துவங்க குளிரின் காரணமாக அவ்வப்போது கொடுக்கப்பட்ட ஓய்வு நேரத்தில் குளிரைப் போக்க இத்திரைப்படத்தின் இரண்டு ஹாட் ஹீரோயின்களான நயன்தாராவும், டாப்ஸியும் குலுமனாலியிலுள்ள பைக் ரைடிங்கில் சவாரி செய்து குளிரால் உறைந்துபோன தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்கள். இது போன்ற பன்னாடை செய்திகளையும் வரிவிடாமல் படிப்பதற்கு ரொம்ப நன்றிங்கோ

கருத்துகள் இல்லை: