சனி, 5 ஜனவரி, 2013

வேடிக்கை பார்த்த போலீஸ் ! டெல்லி பாலியல் சம்பவம்

 நிர்வாணமாக கிடந்த எங்களை போலீசார் வேடிக்கை பார்த்தனர்! உயிரிழந்த டெல்லி மாணவியின் நண்பர் பேட்டி!
உயிரிழந்த மாணவியின் நண்பரிடம் பேட்டி எடுத்து வெளியிட்ட டிவி நிறுவனம் மீது டெல்லி போலீசார் வழக்கு!டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த மாணவியின் ஆண் நண்பரிடம் பேட்டி எடுத்து அதை வெளியிட்டதற்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.டெல்லியில் ஓடும் பேருந்தில் 23 வயது மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் பேருந்தில் இருந்து அந்த மாணவியும், அவரது ஆண் நண்பரையும் அந்த கும்பல் தூக்கி வீசியது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பேட்டி கண்டு வெளியிட்டது. இதில், ஓடிய பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பின்னர் சுமார் 25 நிமிடங்கள் வரை சாலையில் உயிருக்கு போராடினோம். பொதுமக்கள் யாரும் உதவ முன்வரவில்லை. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை ஓரத்தில் நிர்வாணமாக கிடந்த எங்களை வேடிக்கை பார்த்தனர். இந்த வழக்கு எந்த காவல்நிலைய எல்லைக்குள் வரும் என போலீசார் ஆலோசனை நடத்தினர். இதனால் 45 நிமிடங்கள் விரயமானது. அப்போது, யாரோ ஒருவர் கொடுத்த துணியை வைத்து எனது தோழியின் உடலை மறைக்க முயன்றேன். ஆம்புலன்ஸ் வேன் எதுவும் வராத நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த எனது தோழி குறித்து மிகவும் கவலை அடைந்தேன். பின்னர் நானே எனது தோழியை போலீஸ் வேனில் தூக்கி வைத்தேன். காவல்துறையினர் அருகேயுள்ள மருத்துவமனைக்கு செல்லாமல், நீண்ட தூரம் பயணித்து சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு அந்த நபர் கூறியுள்ளார்.>காவல்துறையினரின் அலட்சியமே இதுபோன்ற குற்றங்களுக்கு காரணம் என பொதுமக்களின் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர் தங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்று பேட்டி அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: