ஞாயிறு, 30 டிசம்பர், 2012

கலைஞர் சொன்னது போல் ப.சிதம்பரம் PM ஆவாரா ?

கலைஞர் சொன்னது போல் விரைவில் பிரதமர் ஆவேன் : ப.சிதம்பரம் சென்னை காமராஜர் அரங்கத்தில் இன்று (29.12.2012) மாலை 4.30 மணிக்கு ’’ப.சிதம்பரம் ஒரு பார்வை’’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்
 திமுக தலைவர் கலைஞர் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.  மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி ஆச்சி நூலில் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கவிஞர்கள் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். கவிஞர் இலக்கியா நடராஜன் வரவேற்புரையாற்றினார். கலைஞர் பேசும்போது, ‘’ஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வேண்டும் என்ற ஆசை  எல்லோருக்கும் இருக்கும். உங்களைப்போலவே அந்த ஆசை எனக்கும் இருக்கிறது’’ என்று தெரிவித்தார். பின்னர் பேசிய ப.சிதம்பரம், ‘’கமல் சொன்னது போல், கலைஞர் சொன்னதுபோல் அடுத்த நிலைக்கு செல்வேன். அதற்கான அத்தனை முயற்சிகளும் இருக்கும்.கலைஞர் சொன்னது போல் ஒரு வேட்டி கட்டிய தமிழர் பிரதமர் ஆகும் நாள் வரும்.  அது விரைவில் நடக்கும் என்று ஆசைப்படுகிறேன்’’ என்று தெரிவித்தார் nakkheeran.in/

கருத்துகள் இல்லை: