சனி, 5 ஜனவரி, 2013

குற்றப்பத்திரிகையில் 17 வயது நபரின் பெயரைச் சேர்க்க டில்லி மாணவியின் சகோதரர் கோரிக்கை!

டெல்லி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகையில் 17 வயது நபரின் பெயரைச் சேர்க்காதது குறித்து, மாணவியின் சகோதரர் கவலை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:18 வயதுக்கு குறைந்தவர் என்ற அடிப்படையில், குற்றப்பத்திரிகையில் ஒருவரின் பெயர் சேர்க்கப்படவில்லை. ஒருவரின் வயதைக் காரணம் காட்டி, அவர் செய்த குற்றத்தின் அளவை குறைத்து மதிப்பிடக்கூடாது. அவர் 18 வயதை எட்டுவதற்கு நான்கு மாதங்களை எஞ்சியுள்ளன. எது சரி, எது தவறு என்பது அவருக்கு தெளிவாகவே தெரியும். எனவே, அவரை வயது வந்தவராகவே கருத வேண்டும். டெல்லி போலீஸார், குற்றம் சாட்டப்பட்ட அந்த 17 வயது நபரின் பெயரையும் குற்றப்பத்திரிகையில் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், இது தொடர்பாக சட்டரீதியாக நாங்கள் முயற்சி செய்வோம் என்றார்  nakkheeran.in

கருத்துகள் இல்லை: