திங்கள், 31 டிசம்பர், 2012

635 கற்பழிப்பு வழக்குகள் : ஒருவருக்கு மட்டுமே தண்டனை

டெல்லியில், இந்தாண்டில், 635 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு வழக்கில் மட்டுமே, குற்றவாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது' என்ற தகவல் வெளியாகியுள்ளது.மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம்: டில்லியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கடந்தாண்டை விட, இந்தாண்டில் அதிகரித்துள்ளன. இந்தாண்டில் மட்டும், 635 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக, 754 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், ஒரு குற்றவாளிக்கு மட்டுமே, தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும், 403 பேர் மீது, வழக்குகள் நிலுவையில் உள்ளன. கற்பழிப்பு குற்றங்களை பொறுத்தவரை, கடந்த ஐந்தாண்டு களை ஒப்பிடும் போது, இந்தாண்டு தான், அதிக குற்றங்கள் நடந்துள்ளன. இவ்வாறு அந்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது  .nakkheeran.in/

கருத்துகள் இல்லை: