வெள்ளி, 23 டிசம்பர், 2011

ஆ.ராசா எகிறுகிறார் .. சீன் காட்டுகிறீர்களா?”“பகீர் மிரட்டல்.. குபீர் ஓட்டம்


சி.பி.ஐ. தனக்கு எதிராக ஆசீர்வாதம் ஆச்சாரியை பொய்ச்சாட்சியாக செட்டப் செய்திருப்பதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, இன்று (வெள்ளிக்கிழமை) டில்லி கோர்ட்டில் குற்றம் சாட்டினார். “கோர்ட்டில் ஆச்சாரிக்கு கொலைமிரட்டல்” என்று நேற்று கூறப்பட்டது, திறமையாக நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்று ராசாவின் வக்கீல் சுசில் குமார் சாடினார்.
சாட்சியை குறுக்கு விசாரணை செய்த வக்கீல் குமார், “நேற்று இந்தக் கோர்ட்டில் அரங்கேறிய நாடகம் எதற்காக என்று எமக்கு நன்றாகவே தெரியும்”  என்றார். (நாடகம் தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
“நேற்று நடத்தப்பட்ட நாடகம், ஜனவரி 2-ம் தேதியை மனதில் வைத்தே நடந்தது. எனது கட்சிக்காரர் ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அன்று கோர்ட்டுக்கு வருகின்றது. அதற்காக நடத்தப்பட்டதே ஆச்சாரி கொலை மிரட்டல் நாடகம்”  என்றும் அவர் கூறினார்.

“யாரோ ஒருவர் ஆச்சாரிக்கு கோர்ட்டில் வைத்து கொலை மிரட்டல் விடுத்தாராம். இவர் அதைப்பற்றி வாய் திறந்த உடனே அந்த நபர் கோர்ட்டைவிட்டு ஓடி மறைந்து விட்டாராம். வெளியேயிருந்த போலீஸால்கூட அவரைப்  பிடிக்க முடியவில்லையாம். ஆனால், அதே நபர் ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியாவுக்கு அருகே அமர்ந்திருந்ததை ஆச்சாரி பார்த்தாராம். மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்ட நாடகமாக அல்லவா இருக்கிறது இது” என்று நீதிபதியிடம் தெரிவித்தார் ராசாவின் வக்கீல்.
நேற்று நடைபெற்ற “பகீர் மிரட்டல் – குபீர் ஓட்டம்”  கதை தொடர்பாக நீதிபதிக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்க வேண்டும் போலிருக்கிறது. அவர், “ஆச்சாரி இதற்கு முன்னரும் தன்னை யாராவது மிரட்டினார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறாரா?” என்று கேட்டார்.
“அவர் அப்படியெல்லாம் இதற்குமுன் புகார் கூறியதில்லை”
“அப்படியொரு புகார் அவரால் (ஆச்சாரி) முன்பே கூறப்பட்டிருந்தால், இந்த வழக்கில் யாருக்கும் ஜாமீன் கிடைத்திருக்காது” என்றார் நீதிபதி.
நேற்று நடைபெற்ற ‘கொலை மிரட்டல்’ விவகாரம் ஒரு செட்டப் போலவே தெரிகின்றது. “சந்தோலியா கைதியாக இருக்கும்போதே அவரது ஆள் சாட்சியை மிரட்டுகிறார் என்றால் (அதுவும் கோர்ட்டில் வைத்து), அவருக்கு ஜாமீன் கொடுத்தால் ஜட்ஜையே மிரட்டுவார்” என்ற ரீதியில் ஜனவரி 2-ம் தேதி வாதம் செய்வதற்காக கிரியேட் பண்ணப்பட்ட சீன் என்பதற்கே சான்ஸ் அதிகம்!
www.viruviruppu.com

கருத்துகள் இல்லை: