திங்கள், 1 நவம்பர், 2010

மலையக தமிழ் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் : சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் மலையக தமிழ் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்து இந்த வாரத்தில் தீர்மானிக்கப்படும் என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது குறித்த யோசனைத் திட்டம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாரத்தில் நடத்தப்பட உள்ள பேச்சுவார்த்தைகளின் போது மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொள்வது தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் கட்சிகளின் தலைவர்களினால் சமூகமளிக்க முடியாத காரணத்தினால் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் தற்போது வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் மட்டும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டின் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளையும் தமது கூட்டமைப்பில் இணைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: