செவ்வாய், 21 செப்டம்பர், 2010

மேஜர் ஜென்ரல் சாவேந்திர சில்வா ஐ.நா விற்கான பிரதிநிதியாக பதவியேற்றார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளில் தலைமையகத்தில் அவர் உத்தியோபூவர்மாக தனது கடமைகளை பொறுபேற்றுக்கொண்டார்.

புலிகளுக்கு எதிரான போரில் 58 வது இராணுவ படையணிக்கு பொறுப்பாக செயற்பட்ட சவேந்திர போரில் பல முக்கிய பங்காற்றியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவரை ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி உயர்ஸதானிகராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமித்தார்.

கருத்துகள் இல்லை: