வியாழன், 23 செப்டம்பர், 2010

வவுனியா - கொழும்பு ரயிலில் மோதுண்டு அண்ணனும் தங்கையும் பலி

கையடக்க தொலைபேசிகளின் மூலம் பாடல் இணைப்பு கருவிகளை காதில் பொருத்தியவாறு ரயில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழர்களான அண்ணனும் தங்கையும் வவுனியாவில் இருந்து கொழும்புக்கு பயணித்த தொடரூந்தில் மோதுண்டு பலியாகினர். இப்பரிதாபகரமான துயரச் சம்பவம் இன்று அதிகாலை கொழும்புக்கு அருகில் ஹுனுப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தற்போது இருவரின் சடலங்களும் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: